கடந்த 5ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார். இதையடுத்து அதிமுக பொது செயலாளர் பதவி காலியாக இருந்தது. இந்த பதவியில் பொறுப்பேற்குமாறு ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் அமைச்சர்கள் வலியுறுத்தினர். ஆனால், அவர் மவுனம் காத்து வந்தார்.
Add Asianetnews Tamil as a Preferred Source


இதை தொடர்ந்து அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு தற்போது பூந்தமல்லி நெடுஞ்சாலை வானகர்த்தில் உள்ள தனியார் திருமண மண்படத்தில் நடக்கிறது. இதில், அதிமுக பொது செயலாளராக சசிகலாவை நியமித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இதற்கு அனைத்து அமைச்சர்களும், நிர்வாகிகளும் முன் மொழிந்துள்ளனர். இந்த கூட்டத்தில் சசிகலா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
