Asianet News TamilAsianet News Tamil

சம்பளத்துக்கு ஆள் பிடிக்கும் சசிகலா! சம்பளம் இவ்வளவா?! கலாய்க்கும் அ.தி.மு.க.. கடுப்பில் சின்னம்மா...

நிழல் அரசியல் மூலம் அதிகாரம் மற்றும் அந்தஸ்து உச்சத்தை பார்த்துவிட்ட சசிகலா, இப்போது அதில் ஒரு துளியை கூட சுவைக்க வழியில்லாமல் வேதனையில் இருக்கிறாராம்

Sasikala is recruiting her personal security team in afraid of ADMK
Author
Chennai, First Published Jan 26, 2022, 12:30 PM IST

அது ஜெயலலிதா தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க.வின்  பொதுச்செயலாளராகவும் கோலோச்சிக் கொண்டிருந்த காலம். தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் விமர்சகர் ஒருவர் எழுதினார் இப்படி….

“அ.தி.மு.க.வின் தலைமை நிர்வாகிகள் தன்னைப் பார்த்து அஞ்சி நடுங்கியும், தன் முன்னே கை கட்டி நிற்பதையும் பார்த்து ஜெயலலிதாவுக்கு மனதில் மிகப்பெரிய பெருமை உண்டு. ஆனால் ஒரு உண்மை அவருக்கு தெரியாது! இந்த நிர்வாகிகள் பயந்து நடுங்கியது உண்மையில் ஜெ.,வை பார்த்து அல்ல. அவருக்கு பின்னால் நிழலாக நின்று கொண்டிருந்த சசிகலாவை பார்த்துதான். ஏனென்றால் ஜெயலலிதா ஒரு குழந்தை! பிடிவாதம் பிடிப்பார், கோபம் கொள்வார். ஆனால் தீங்கிழைக்க மாட்டார். ஆனால் சசி அப்படியல்லவே. அதுதான் நிர்வாகிகளின் நடுநடுக்கம்.’ என்று.

Sasikala is recruiting her personal security team in afraid of ADMK

இது உண்மை எனும் படிதான் அன்றைய அ.தி.மு.க.வினுள் பல சூழல்கள் இருந்தன. மன்னார்குடி குடும்பம்! என்றழைக்கப்பட்ட சசிகலாவின் வகையறாக்களை பார்த்து அரண்டு, மிரண்டனர் அ.தி.மு.க.வினர். ம்ம்ம்ம் என்றால் பதவி பறிப்பு, ஏன் என்றால் கட்சியிலிருந்து நீக்கம்! என்று கட்சியினர் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்கும்படி ஜெ.,வுக்கு தூண்டுதல் செய்தது எல்லாமே சசி வகையறாவே! என்பதே அ.தி.மு.க.வினரின் கோபம், ஆதங்கம். அதனால்தான் ஒரு முறை ஜெ., அந்த டீமை போயஸிலிருந்தும், கட்சியிலிருந்தும் வெளியேற்றியபோது தமிழகம் முழுக்க கொண்டாடினர், குதூகலித்தனர் அ.தி.மு.க.வினர். அட திருப்பூரில் மொட்டையே போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினரே.

அதே கோபத்தில்தான் இப்போதும் அவரை கட்சியிலிருந்து நீக்கி வைத்திருப்பதுடன், உள்ளே நுழைய தடை போடுகின்றனர்.

அரசியல் மூலம் அதிகார மற்றும் அந்தஸ்து உச்சத்தை பார்த்துவிட்ட சசிகலாவால் இப்போது அதில் ஒரு துளியை கூட சுவைக்க வழியில்லாமல் வேதனையில் இருக்கிறார். அதனால்தான் எப்படியாவது மீண்டும் அ.தி.மு.க.வை கைப்பற்றிட துடிக்கிறார். இதற்காக அவர் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம், நிர்வாகிகளுடன் இழுப்பு பேச்சுவார்த்தை என பல பிளான்களை செய்து கொண்டே இருக்கிறார்.

Sasikala is recruiting her personal security team in afraid of ADMK

அப்படி வெளியே செல்கையில் தன்னை சுற்றி பாதுகாப்புக்கு பவுன்சர் பாய்ஸ் போல் செக்யூரிட்டி டீம் இருக்க வேண்டுமென்பது சசியின்  எண்ணம். ஏனென்றால் தன் மீது ஆத்திரத்தில் இருக்கும் யாரும் தனக்கு அபாயத்தை விளைவித்துவிட கூடாது! என பயப்படுகிறாராம். இதற்காக தன் ஆதரவாளர்  டீமிலிருந்தே பாதுகாப்பு படையினரை உருவாக்கலாம்! என திட்டமிட்டாராம். ’சின்னம்மாவிடம் வேலைக்கு சேர்ந்தால் சிறப்பாக சம்பாதிக்கலாம்’ என்று நேர்காணலுக்கு போய் நின்றார்களாம் ஆதரவாளர்கள் பலர். ஆனால் இந்த பணிக்கான மாத சம்பளமாக தருவதாக அவர் சொன்ன தொகையை கேட்டதும், அந்த நபர்கள் தலைதெறிக்க ஓடிவிட்டார்களாம்.

இதைத்தான் கதை கதையாய் சொல்லி ‘எம்மாம் பெரிய சசிகலாவோட நிலைமை என்னாச்சுன்னு பாருங்க மக்கழேய்! இவர்கிட்ட இப்படி அடிமை வேலை பார்த்து, நயா பைசா சம்பாதிக்கிறதுக்கு பதிலா பசியிலேயே சாவலாம்னு பல பேர் முடிவு பண்ணிட்டாங்க.’ என்று சோஷியல் மீடியாவில் எழுதி சிரிக்கின்றனர் அ.தி.மு.க.வினர். இது சசியின் காதுகளுக்குப் போக, கடுமையான கடுப்பில் இருக்கிறாராம்.

Follow Us:
Download App:
  • android
  • ios