Asianet News TamilAsianet News Tamil

கிடைத்தது 15 நாட்கள் பரோல் - தஞ்சை செல்கிறார் சசிகலா...!

sasikala Got 15 days parole
sasikala Got 15 days parole
Author
First Published Mar 20, 2018, 12:47 PM IST


கணவர் நடராஜன் உயிரிழப்பை தொடர்ந்து சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. 

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் பிப்ரவரி 15, 2017 முதல் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா கடந்த அக்டோபர் மாதத்தில் நடராஜனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்ட போது அவரை பார்த்துக் கொள்வதற்காக 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. 

இந்நிலையில், சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 16ம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வந்தது. 

இதையடுத்து சசிகலாவுக்கு பரோல் கேட்டு ஓரிரு நாட்களில் மனு தாக்கல் செய்யப்படும் என்று வழக்கறிஞர் அசோகன் தெரிவித்திருந்தார். பரோல் பெறுவதில் சட்ட சிக்கல் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். 

ஆனால் சசிகலா கணவர் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக நள்ளிரவு 1.35 மணிக்கு உயிரிழ்ந்தார். இந்நிலையில், கணவரின் இறுதி சடங்கில் பங்கேற்க 15 நாட்கள் சிறை விடுப்பு கோரினார் சசிகலா. 

இதையடுத்து சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கி சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பரோல் கிடைத்ததையடுத்து நடராஜனின் இறுதி சடங்கில் பங்கேற்க தஞ்சாவூர் செல்கிறார் சசிகலா. 

Follow Us:
Download App:
  • android
  • ios