Asianet News TamilAsianet News Tamil

ஸ்டெர்லைட் போராட்டத்தில் கைதான 93 நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம்.. மு.க.ஸ்டாலின் அதிரடி சரவெடி அறிவிப்பு..!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய போது கைது செய்யப்பட்ட  93 நபர்களுக்குக் காயம், மன உளைச்சல் ஏற்பட்டதைக் கருதி நிவாரணமாக தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Rs 1 lakh each for 93 people arrested in Sterlite protest... mk stalin Announcement
Author
Thoothukudi, First Published May 21, 2021, 6:28 PM IST

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய போது கைது செய்யப்பட்ட  93 நபர்களுக்குக் காயம், மன உளைச்சல் ஏற்பட்டதைக் கருதி நிவாரணமாக தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 2018ம் ஆண்டு 18 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 99 நாட்களாக தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனையடுத்து இந்த போராட்டத்தின் 100வது நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பெண்கள் உட்பட மொத்தம் 13 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மே 28-ம் தேதி மூடப்படுவதாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. போராட்டத்திற்கு முக்கிய காரணமாக இருந்ததாகக் கூறி அதிமுக அரசு 94 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Rs 1 lakh each for 93 people arrested in Sterlite protest... mk stalin Announcement

இதுகுறித்து தனது செய்திக் குறிப்பில் தூத்துக்குடியில்‌ 22.05.2016 அன்று ஸ்டெர்லைட்‌ தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையின்‌ காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள்‌ குறித்தும்‌, பொது மற்றும்‌ தனியார்‌ சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள்‌ குறித்தும்‌ விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி அருணாஜெகதீசன்‌ அவர்கள்‌ தலைமையிலான விசாணை ஆணையத்தின்‌ இடைக்கால அறிக்கை 14.05.2021 அன்று தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

Rs 1 lakh each for 93 people arrested in Sterlite protest... mk stalin Announcement

இந்த அறிக்கையில் இந்த போராட்டம் குறித்து காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தேவையற்ற வழக்குகளை திரும்பப் பெற ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் அவர்களின் கருத்தும், காவல்துறைத் தலைவரின் அறிக்கையும் பெறப்பட்டு அரசால் கவனமாக பரிசீலிக்கப்பட்டது. மேற்கூறிய பரிந்துரைகள் மற்றும் கருத்துரைகளின் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பின்வரும் முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளார்.

Rs 1 lakh each for 93 people arrested in Sterlite protest... mk stalin Announcement


*  இந்த சம்பவம்‌ குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வழக்குகளில்‌, மத்திய குற்ற புலனாய்வுத்துறை வசம்‌ ஒப்படைக்கப்பட்டுள்ள வழக்குகள்‌, பொது மற்றும்‌ தனியார்‌ சொத்துக்களுக்கு சேதம்‌ ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பதியப்பட்டுள்ள வழக்குகள்‌ தவிர, ஏனைய வழக்குகள்‌ அனைத்தும்‌ திரும்பப்‌ பெறப்படும்‌.

* 22.05.2018 அன்று நடந்த சம்பவத்திற்கு முன்னர்‌ இந்த போராட்டம்‌ தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில்‌ உச்சநீதிமன்றத்தில்‌ நிலுவையில்‌ இருக்கும்‌ வழக்குகள்‌ உள்ளிட்ட சில வழக்குகள்‌ தவிர ஏனைய வழக்குகள்‌ திரும்பப்‌ பெறப்படும்‌. காவல்‌ துறையினரால்‌ கைது செய்யப்பட்ட 94 நபர்களில்‌ சிலருக்கு காயங்களும்‌, பலருக்கு மன உளைச்சலும்‌ ஏற்பட்டதைக்‌ கருதி அவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க ஆணையம்‌ பரிந்துரைத்துள்ளது. இதனடிப்படையில்‌ 93 நபர்களுக்கு நிவாரணமாக தலா ஒரு இலட்சம்‌ ரூபாய்‌ வழங்கப்படும்‌.

*  இது தவிர, ஒரு நபர்‌ வேறு, ஒரு வழக்கில்‌ கைது செய்யப்பட்டு சிறைச்சாலையிலேயே இறந்துவிட்டதால், வாழ்வாதாரம்‌ இழந்து வாடும்‌ அவரது 72 வயது தாயாருக்கு ரூ.2 இலட்சம்‌ நிவாரணத்தொகை வழங்கப்படும்‌.

*  விசாரணை ஆணையம்‌ அளித்துள்ள பரிந்துரையின்‌ அடிப்படையில்‌ போராட்டத்தின்போது, தமிழ்நாடு காவல்துறையினரால்‌ கைது செய்யப்பட்ட நபர்களின்‌ உயர்கல்விக்காகவும்‌, வேலைவாய்ப்பிற்காகவும்‌ தடையில்லாச்‌ சான்றிதழ்கள்‌ வழங்கப்படும்‌ என தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios