ஹரி நாடாரை மீட்க பணம் கேட்ட ராக்கெட் ராஜா..?? பனங்காட்டு படையில் குண்டு வைத்த காதலி மஞ்சு.
ஹரி நாடார் பனங்காட்டு படை கட்சியில் இருந்து நீக்கப்பட்டது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள ஹரிநாடார் காதலி மஞ்சு, ஹரி நாடாருக்கு சோதனையான இந்த கால கட்டத்தில் நான் அவருடன் இருக்கிறேன், அவருடைய வேதனை, வலி என்ன என்பதை நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.
ஹரி நாடாரை மீட்க பனங்காட்டு படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா தன்னிடம் பணம் கேட்டதாக ஹரி நாடார் காதலி மஞ்சு பகீர் தெரிவித்துள்ளார். எப்படியாவது தன்னுடைய கணவரை மீட்க வேண்டும் என உதவி கேட்டபோது ஒரு கட்சித் தலைவராக இருந்து கொண்டு எவ்வளவு பணம் கொடுப்பாய் என ராக்கெட் ராஜா பேரம் பேசியதாக மஞ்சு தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர்களிலேயே அதிக வாக்குகளை பெற்றவர் ஹரி நாடார். வட்டிக்கு பணம் கொடுப்பது, தொழில் தொடங்க பணம் கேட்டு வருபவர்களுக்கு உடமைகளை எழுதி வாங்கிக்கொண்டு பணம் கொடுப்பது என பைனான்சியராக வலம் வந்தவர் ஹரி நாடார். நடமாடும் நகைக்கடையாக வலம் வந்த அவர், எப்போதும் 12 கிலோ எடை கொண்ட நகைகளை அணிந்திருப்பார் இதுதான் அவரின் அடையாளம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பிடிபட்ட அவர், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் சோதிக்கப்பட்டார். பின்னர் அவர் அணிந்துள்ள நகை மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டவே, நகைகளுக்கான பில் கேட்கப்பட்டது. உரிய ஆவணங்களை காண்பித்த பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். அது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
அதன்பிறகு பனங்காட்டு படை என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து, அதில் முக்கிய பொறுப்பிலும் அவர் இருந்து வந்தார். இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 37 ஆயிரத்து 727 வாக்குகள் பெற்றார். அதன்மூலம் திமுக வேட்பாளர் ஆலடி அருணாவின் வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டது. அதன் பிறகு தன்னை பெரிய அரசியல் செல்வாக்குள்ள தலைவராக கருதிக் கொண்ட ஹரி நாடார் பல அரசியல் கட்சித் தலைவர்களையும் சகட்டுமேனிக்கு விமர்சிக்க தொடங்கினார். அடிக்கடி யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து பல மூத்த தலைவர்களையும் அனாயசமாக விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்த அவர், ஆலங்குளம் தொகுதியில் மோதிப் பார்க்க தயாரா என சவாலுக்கு அழைத்தார் அவர். அப்போது அவரை பலரும் கடுமையாக விமர்சித்தனர்.
அதைத்தொடர்ந்து சீமானை தாக்கிப் பேசிய நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் தலையிட்டு விஜயலட்சுமியை எச்சரித்து பேசினார். அதற்கு ஆவர் மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்தார் விஜயலட்சுமி. அடுத்தடுத்து பல சர்ச்சைகளில் சிக்கிய அவர் பெங்களூருவை சேர்ந்த இருவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி தருவதாக கூறி 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கர்நாடக மாநில போலீசார் கோவளத்தில் வைத்து அவரை கைது செய்தனர். இது தொடர்பாக அவர் பரப்பக ஹக்ரகார சிறையில் இருந்து வந்த நிலையில், விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு தற்போது கடலூர் சிறையில் இருந்து வருகிறார். இதற்கிடையில் அவர் சார்ந்திருந்த கட்சி அவரை கைவிட்டு விட்டதாக கூறப்பட்டது. கட்சியை நம்பி ஓவராக பேசி வம்பில் மாட்டிக் கொண்டதை உணர்ந்து ஹரிநாடார் கட்சி தன்னை முதுகில் குத்தி விட்டது, கட்சியை கையில் வைத்திருப்பவர்கள் தான் சிறையில் இருந்து விடுதலையாகி வந்து விடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள் என்று அவர் புலம்பி வருகிறார் என தகவல்கள் வெளியானது.
இதற்கிடையில் ஹரி நாடாரை சிறையில் இருந்து மீட்க மலேசியாவைச் சேர்ந்த மஞ்சு என்ற பெண் தமிழகம் வந்துள்ளார். தன்னை ஹரி நாடாரின் மனைவி என கூறிக்கொள்ளும் அவர், தனக்கும் ஹரி நாடாருக்கும் குழந்தை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ஹரிநாடாரின் முதல் மனைவி ஷாலினிக்கும் மஞ்சுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் தொலைபேசியில் ஒருவரை மாற்றி ஒருவர் மிக மோசமாக பேசிக்கொள்ளும் ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ள மஞ்சு, தனது கணவர் ஹரி நாடார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு ஷாலினி தான் காரணம், அவர் கணவரைப் பற்றி தவறாகப் பிரச்சாரம் செய்ததால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னை முதல் மனைவி என்று சொல்லிக் கொள்ளும் ஷாலினி ஹரி நாடார் கைதாகி 8 மாதங்களாகியும் ஏன் அவரை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் ஹரிநாடார் படும் வலியை வேதனையை உணர்ந்து தான் அவரை மீட்க தான் போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹரி நாடார் விடுதலையாகி வந்த பிறகு தனக்கும் அவருக்கும் என்ன உறவை என்பதை ஹரியே கூறுவார் என்றும், தற்போது தனது முழு கவனமும் அவரை ஜாமீனில் எடுப்பதிலேயே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக ஹரி நாடாரை கட்சியில் இருந்து நீக்கி கனங்காட்டுப்படை கட்சி தலைவர் ராக்கெட் அறிவித்துள்ளார். அதில், திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தைகுளத்தைச் சார்ந்த ஹரிநாடார் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிவுறுத்தலின்படி, மாநில மாவட்ட நிர்வாகிகளின் ஒப்புதலின்படி அவர் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கப்படுகிறார். இனி அவரது கருத்திற்கும் செயலுக்கும் இனி கட்சி பொறுப்பேற்காது. பனங்காட்டு படை கட்சி உறவுகள் அவரோடு கட்சி அரசியல் செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஹரி நாடார் பனங்காட்டு படை கட்சியில் இருந்து நீக்கப்பட்டது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள ஹரிநாடார் காதலி மஞ்சு, ஹரி நாடாருக்கு சோதனையான இந்த கால கட்டத்தில் நான் அவருடன் இருக்கிறேன், அவருடைய வேதனை, வலி என்ன என்பதை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். அவருடன் சேர்ந்து என்னையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர் கைது செய்யப்பட்ட போது என்னிடம் ஒன்றுமே இல்லை, யாரும் எனக்கு உதவி செய்யவில்லை, அப்படிப்பட்ட நிலையில் அவர் சார்ந்திருக்கிற கட்சி தலைவரிடம் நான் பேசினேன். என்னுடைய கணவர் போலீஸில் பிடிபட்டு விட்டார், அவரை மீட்க வேண்டும் என கதறினேன். அப்போது அந்த கட்சிக்கு தலைவராக இருக்கும் ராக்கெட் ராஜா அவர்கள் என்னிடத்தில் பணம் கேட்டார். ஒரு தலைவர் என்ற முறையில் அவரிடம் நான் உதவி கேட்டேன் ஆனால் அவர் பணம் கேட்கிறார்.
ஆனால் அந்த பணத்தை நான் கொடுக்க விரும்பவில்லை, அவர் இதற்கு முன்பு பல முறை என்னையும் சந்தித்திருக்கிறார். அவருடன் நான் உணவு அருந்தியிருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் ஒரு நாள் கூட எனக்கு ஹரி நாடாரைப் பற்றியும், அவரது குடும்ப வாழ்க்கையைப் பற்றியும் என்னிடம் பேசியது இல்லை. ஷாலினியை குறித்தும் அவர் என்னிடம் பேசியதே இல்லை, எல்லா பிரச்சினையும் ராக்கெட் ராஜாவுக்கு தெரியும், இப்போது எனது கணவரை கட்சியிலிருந்து நீக்கி விட்டார்கள், எனக்கு யாரும் உதவி செய்யக் கூடாது எனவும் உத்தரவு போடுகிறார். இவ்வாறு மஞ்சு தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.