Asianet News TamilAsianet News Tamil

ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ஓரம் கட்டப்பட்ட டாக்டர் இளவரசன்... பரபர பின்னணி!

ஜினி மக்கள் மன்றத்தில் ரஜினிக்கு அடுத்து கோலோச்சி வந்த டாக்டர் இளவரசனை பதஃவியிலிருந்து நீக்கியது போல் அந்த அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வந்த தூத்துக்குடி ஸ்டாலின், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ராஜசேகர் ஆகியோரும் தற்போது ராகவேந்திரா மண்டபம் பக்கம் வருவதில்லை என்கிறார்கள்.

Rajinikanth removed organisational secretary ilavarasam from makkal mandram
Author
Tamil Nadu, First Published Jan 1, 2019, 6:32 PM IST

ரஜினி மக்கள் மன்றத்தில் ரஜினிக்கு அடுத்து கோலோச்சி வந்த டாக்டர் இளவரசனை பதஃவியிலிருந்து நீக்கியது போல் அந்த அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வந்த தூத்துக்குடி ஸ்டாலின், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ராஜசேகர் ஆகியோரும் தற்போது ராகவேந்திரா மண்டபம் பக்கம் வருவதில்லை என்கிறார்கள். இதற்கும் ரஜினி அவர்களை ஓரம்கட்டியது தான் காரணம் என்று கூறப்படுகிறது. புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் மேலும் சிலருக்கு அதிகாரம் கொடுத்து சோதனையிட ரஜினி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Rajinikanth removed organisational secretary ilavarasam from makkal mandram

ரஜினி கட்சியே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் அவரது மக்கள் மன்றத்திற்குள் ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துகள். இப்போது ரஜினிக்கு அடுத்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகத்தில் கோலோச்சி வந்த கடலூர் டாக்டர் இளவரசன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது பேரதிர்ச்சியை கிளப்பி உள்ளது. ரஜினி கட்சியே ஆரம்பிக்கவில்லை அதற்குள் அவரது மக்கள் மன்றத்திற்குள் ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துகள். இப்போது ரஜினிக்கு அடுத்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகத்தில் கோலோச்சி வந்த கடலூர் டாக்டர் இளவரசன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது பேரதிர்ச்சியை கிளப்பி உள்ளது. 

ரஜினி மக்கள் மன்றத்தில் ஒருவருக்கு ஒரு பொறுப்பு என்பது தான் விதி. ஆனால், ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர், கடலூர் ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளர் என ஒரே நபர் இரு பொறுப்புகளை வகித்து வந்தது கடலூர் இளவரன் மட்டுமே. அப்படியானால் அவரது செல்வாக்கு எப்படிப்பட்டது என்பதை உணர முடிகிறதா? அப்படி சகல அதிகாரங்களையும் கொடுத்திருந்தார் ரஜினி. இளவரசனின் அதிரடி நடவடிக்கைகளால் பல ஆண்டுகள் ரஜினி ரசிகர் மன்றத்தில் இருப்பவர்களே வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அப்படிப்பட்ட இளவரசனை இப்போது வீட்டுக்கு விரட்டியடித்திருக்கிறார் ரஜினி. Rajinikanth removed organisational secretary ilavarasam from makkal mandram

கட்சி ஆரம்பிப்பதற்குள் நிர்வாகிகள், மற்றும் மன்றத்தினரின் செயல்பாடுகள் ரஜினிக்கு பெரும் தலைவலியை உருவாக்கி வருகிறது.  ரஜினி மக்கள் மன்றத்தை ஆரம்பித்த ஓராண்டுக்குள் ஒரு டஜன் பிரச்னைகளை கடந்து விட்டார் ரஜினி. லைக்கா நிறுவனத்தின் செயல் அதிகாரியாக இருந்த ராஜூ மகாலிங்கத்தையும், சுதாகரையும் ஆரம்பத்தில் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். ஆனால், பேட்ட படத்திற்கான ஷூட்டிங்கிற்காக ரஜினி வடமாநிலத்தில் இருந்த போது சுதாகர், ராஜூ மகாலிங்கம் ஆகிய இருவர் மீதும் அடுக்கடுக்காக புகார்கள் பறந்தன.

இதனால், ஷூட்டிங் இடைவெளியில் சென்னை திரும்பிய ரஜினி, சுதாகர், ராஜூ மகாலிங்கத்தை ஓரம் கட்டினார். பின்னர் கடலூர் பகுதியைச் சேர்ந்த டாக்டர் இளவரசனை ரஜினி மக்கள் மன்றத்தின் தமிழக- புதுவை மாநில அமைப்புச் செயலாளராக அறிவித்து அவரை வழிநடத்த அறிவுறுத்தினார் ரஜினி. கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இளவரசன் மன்றத்தினரின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து ரஜினிக்கு அனுப்பி வந்தார்.Rajinikanth removed organisational secretary ilavarasam from makkal mandram

மன்றக்கூட்டங்களை பல பகுதிகளிலும் நடத்தி வந்த இளவரசன் ரஜினி மக்கள் மன்றத்தில் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிகாரன்ம் மிக்கவராக கோலோச்சினார் ''மன்றத்தில் கட்டுக்கோப்புடன் இல்லாதவர்கள் நிரந்தரமாக நீக்கப்படுவீர்கள்'' என கறாராக பேசி நடவடிக்கை எடுத்து வந்தார். இது நிர்வாகிகள் மத்தியில் அவர் மீது எரிச்சலை ஏற்படுத்தி வந்தது. ’’நிர்வாகிகள் மீது இளவரசன் அனுப்பும் புகார் பட்டியல்களை வைத்து கண்ணை மூடிக்கொண்டு ரஜினி நடவடிக்கை எடுத்து விடுகிறார். அவர் சொல்வதை மட்டுமே கேட்கிறார்’ எனக் கொதித்தெழுந்தனர் நிர்வாகிகள்.

’’எத்தனையோ ஆண்டுகள் ரசிகராக இருந்து, கஷ்டப்பட்டு உடனிருந்த பலரையும் முக்கிய பொறுப்புகளில் ரஜினி நியமிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அலையடித்து வந்தது. ராஜூ மகாலிங்கம், இளவரசன் என புதியவர்கள் வந்து தங்களை கட்டுப்படுத்துவதால் ரஜினி மீது கோபத்தில் இருந்து வந்தனர் அவரது ரசிகர்கள். இதனால், ரசிகர்கள் பலரும், சில நாட்களாக ரஜினி வீட்டுக்கு வருவதை குறைத்துக் கொண்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்த ரஜினி, 'இந்தச் சிக்கலை எப்படி அணுகுவது?' என தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்தார். Rajinikanth removed organisational secretary ilavarasam from makkal mandram

ஒரு கட்டத்தில் மன்றத்தில் இருக்கும் சிலர் கொடுக்கும் தகவல்களை வைத்துக் கொண்டு ஆராயாமல் கண்மூடித்தனமாக நடவடிக்கை எடுக்கத் தொடங்கி விட்டார் கடலூர் இளவரசன். இந்தத் தகவல்கள் ரஜினியின் காதுக்கு சென்றடைய, அதிருப்தியான ரஜினி கடலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து இளங்கோவனை டம்மியாக்கினார். அடுத்து அவர் ஊர் ஊராய் சென்று ஆய்வு செய்வதற்கு தடை போட்டனர். மன்றப்பணிகளை அலுவலகத்தில் இருந்து கவனித்துக் கொண்டால் மட்டும் போதும் என உத்தரவிடப்பட்டது.

இருப்பினும், இளவரசனின் அதிரடி அதிகரித்தது. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் என பலரையும் பந்தாடினார். இதனால் ரஜினி மக்கள் மன்றமே ஸ்தம்பிக்கும் நிலை உருவாகி ரஜினிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. கட்சி ஆரம்பிப்பதற்கும் இப்படியா அதிகாரத்தை பயன்படுத்தி நிர்வாகிகளை நிலைகுலையச் செய்வது..? இப்படியே போனால் என்னாவது என்பதை உணர்ந்த ரஜினி, அமெரிக்கா கிளம்பிச் செல்லும் முன் சென்னையில் இருந்த இளவரசனை போனில் அழைத்து, மன்ற அலுவகத்தை பூட்டி விட்டு சாவியை செக்யூரிட்டியிடம் கொடுத்து விட்டு போய் விடுங்கள். இனி மன்ற விவகாரத்தில் தலையிட வேண்டாம். ஊருக்கு கிளம்புங்கள். இனி வரவேண்டாம்’’ என கறாராக கூறி விட்டு சென்றுள்ளார். ராஜூ மகாலிங்கத்தை அமுக்கி வைத்ததைப் போல் அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் இப்போது இளவரசனின் பதவியையும் பறித்து இருக்கிறார் ரஜினி. இது அவரது ரசிகர் மன்றத்தினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.    Rajinikanth removed organisational secretary ilavarasam from makkal mandram

ரஜினி மக்கள் மன்ற அமைப்புச் செயலாளராக இருக்கும் இந்த இளவரசன் தி.மு.க-வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர். வீரபாண்டியாரின் மகன் ராஜாவின் மூத்த சம்பந்தி இளவரசன். இரண்டாவது சம்பந்தியான நீலா ஜெயக்குமாரும் ரஜினி மக்கள் மன்றத்தின் சேலம் மாவட்டப் பொறுப்பாளராக இருக்கிறார். விரைவில் நீலா ஜெயக்குமாரின் பதவியும் பறிக்கப்படலாம் என்கிறார்கள் ரஜினி மக்கள் மன்ற முக்கிய நிர்வாகிகள். 

Follow Us:
Download App:
  • android
  • ios