Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் இடி, மின்னலுடன் கொட்டித் தீர்கப் போகிறது மழை..!! 16 மாவட்டங்களுக்கு அதிரடி எச்சரிக்கை.

அக்டோபர் 10 முதல் அக்டோபர் 12 வரை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

Rain is going to settle in Tamil Nadu with thunder and lightning , Action alert for 16 districts.
Author
Chennai, First Published Oct 9, 2020, 1:45 PM IST

அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதன் காரணமாகவும் ராயலசீமா மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் நிலவும் (1.5 கிலோ மீட்டர் உயரம் வரை) வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாகவும் அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

Rain is going to settle in Tamil Nadu with thunder and lightning , Action alert for 16 districts.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல் நீலகிரி கோயம்புத்தூர் தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்சையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசையும் ஒட்டி பதிவாகக்கூடும். 

Rain is going to settle in Tamil Nadu with thunder and lightning , Action alert for 16 districts.

கடந்த 24 மணி  நேரத்தில் போளூர் (திருவண்ணாமலை) 12 சென்டிமீட்டர் மழையும், கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) 11 சென்டிமீட்டர் மழையும், மாரண்டஅள்ளி (தர்மபுரி) 7சென்டி மீட்டர் மழையும், ஓசூர் (கிருஷ்ணகிரி) உதக மண்டலம் தல 6 சென்டி மீட்டர் மழையும், மணிமுத்தாறு (திருநெல்வேலி) வைகை அணை (தேனி) குந்தா பாலம் (நீலகிரி) தலா 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 12 ஆம் தேதி வடக்கு ஆந்திர கடற்பகுதியில்கரையை கடக்க கூடும், 

Rain is going to settle in Tamil Nadu with thunder and lightning , Action alert for 16 districts. 

அக்டோபர் 10 முதல் அக்டோபர் 12 வரை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அக்டோபர் 9 முதல் அக்டோபர் 13 வரை அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும், அக்டோபர் 11-12 ஆகிய தேதிகளில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவே மீனவர்கள் இப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என எச்சரிக்கப்படுகிறார்கள். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios