raide in minister vijaya baskar home

ஆண்டுதோறும், எர்பல் 7 ஆம் தேதி உலக சுகாதார தினமாக கொண்டாடப்படுகிறது. அதாவது 1948 ஆம் ஆண்டு முதல் இந்த தினத்தை கடை பிடிக்கப் படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் சுகாதாரத்தினத்தன்று, எதாவது ஒரு டாபிக் பற்றி பேசுவது உண்டு. இந்நிலையில், இந்த ஆண்டு மன அழுத்தம் என்ற தலைப்பில் பல கருத்துக்களை முன்வைக்கப்படுகிறது.உலக அளவில் 32 கோடி பெற மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் , அதில் இந்தியாவில் மட்டும் 5 கோடி பெற மன அழுத்தத்தால் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது .

 இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், உலக சுகாதாரத்தினமான இன்று, தமிழ் நாட்டில் சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.இன்று காலை 6 மணி முதல் தொடங்கிய சோதனை , தொடர்ந்து நடை பெற்று வருகிறது .

.சென்னை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் உள்ள கல்லூரிகளிலும் , கல்குவாரி உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் .

திடீரென சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில், உலக சுகாதார தினமான இன்று வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது