சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்ணியவாதியும், பிஎஸ்என்எல் டெக்னீஷியனுமான கொச்சியைச் சேர்ந்த ரஹானா ஃபாத்திமாவை, பிஎஸ்என்எல் நிர்வாகம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. ஆனால் தான் கோவிலுக்கு சென்றதால்தான் , அய்யப்பனே மனமிரங்கி தனது வீட்டு அருகில் உள்ள அலுவலகத்துக்கு டிரான்ஸ்ஃபர் கொடுத்ததாக நெகிழ்கிறார் ரஹானா ஃபாத்திமா.
அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தவிட்டது. இதையடுத்து அந்த உத்தரவை செயல்படுத்த கேரள அரசு கடும் முயற்சி எடுத்தது. இதற்காக அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாதவி என்ற பெண் முதன்முதலில் தனது குழந்தைகளுடன் கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்தார். ஆனால் ஏராளமான பக்தர்கள் அவரது காலில் விழுந்து மன்றாடியதால் அவர் திரும்பச் சென்றார். இதே போல் பல பெண்கள் சன்னதிக்குள் நுழைய முயன்று முடியாமல் போனது.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் கவிதா மற்றும் பெண்ணியவாதி ரஹானா ஃபாத்திமா ஆகியோர் அய்யப்பன் கோவிலுக்குள் போலீஸ் பாதுகாப்புடன் நுழைய முயன்றனர். ஆனால் பக்தர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவர்கள் இருவரையும் போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.

ஒரு இஸ்லாமிய பெண் எப்படி அய்யப்பன் கோவிலுக்குள் நுழையலாம் என பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. கொச்சியில் உள்ள ரஹானாவின் வீட்டை இந்து அமைப்பினர் தாக்கினர்.
31 வயதானரெஹானாகேரளாவில்பெண்கள்உரிமைக்காகப்போராட்டம்நடத்திவருபவர். இஸ்லாமியமதத்தில்பிறந்தாலும்அதிலிருந்துவெளியேவந்துவிட்டதாகஅவர்கூறியுள்ளார்.

இதனிடையே தற்போதுரெஹானா ஃபாத்திமாவைபிஎஸ்என்எல் நிறுவனம்டிரான்ஸ்ஃபர்செய்துள்ளது. எர்ணாகுளத்தைச்சேர்ந்தரெஹானாகொச்சிபோட்ஜெட்பகுதியில்உள்ளபிஎஸ்என்எல் கிளையில்டெக்னீஷியனாகப்பணிபுரிந்துவந்தார்.
தற்போதுபோட்ஜெட்டிகிளையிலிருந்துஎர்ணாகுளம்அருகேஉள்ளரவிபுரம்பகுதிக்குடிரான்ஸ்ஃபர்செய்யப்பட்டுள்ளார். சபரிமலைக்குச்சென்றதால்தான்புகார்கொடுக்கப்பட்டுஅவர்டிரான்ஸ்ஃபர்செய்யப்பட்டுள்ளார்எனக்கேரளஊடகங்கள்தெரிவித்துவந்தன.

ஆனால், இதுகுறித்துதனதுஃபேஸ்புக்பக்கத்தில்விளக்கம்அளித்துள்ளரெஹானா, ``ஐந்துவருடத்துக்குமுன்பேஎர்ணாகுளத்தில்உள்ளஎனதுவீட்டின்அருகேகிளைக்குடிரான்ஸ்ஃபர்கேட்டிருந்தேன். ஐந்துஆண்டுகளாக டிரான்ஸ்ஃபர்கிடைக்காதஎனக்குச்தற்போது சபரிமலைக்குச்சென்றபின்புஉடனேகிடைத்துள்ளது என நெக்ழிச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

எல்லாம்அய்யப்பனின் அனுக்கிரகம்தான் என்றும், 45 நிமிஷம்டிராஃபிக்நெரிசலுக்குமத்தியில் 6 கிலோமீட்டர்தூரம்ஆபிஸுக்குச்சென்றுவந்தநான்இனிவீட்டிலிருந்து 2 நிமிடத்தில்நடந்தேஆபிஸுக்குச்செல்வேன். எனக்குடிரான்ஸ்ஃபர்கொடுத்தஅதிகாரிகளுக்குச்சுவாமிநல்லதுமட்டுமேகொடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
