"பாஜக ஆட்சியைத்தான் தமிழக மக்கள் விரும்புகிறார்கள்" - கிச்சு கிச்சு மூட்டும் பொன்னார்
தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறினார்.
தமிழக அரசை, பாஜக முடக்குவதாக கூறி திமுக நீலிக்கண்ணீர் வடித்து வருகிறது. ஒரு கட்சியை அழிக்க நினைக்கிறது. இதனால, திமுக மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
மீண்டும் ஆட்சியை பிடிக்க திமுக பிரச்சனைகளையும், வதந்திகளையும் தூண்டி கொண்டே இருக்கிறது. எம்ஜிஆர் ஆட்சி நடத்தி கொண்டிருந்தபோதே, அதிமுகவை அழிக்க நினைத்த கட்சிதான் திமுக.
தமிழகத்தில் பாஜகவுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் வரும் உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும். இதன் பிறகு அதிமுகவும், திமுகவும் காணாமல் போய்விடும்.
திமுகவின் ராஜதந்திர அரசியலால், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதற்கு முழு காரணம் திமுகவினர் மட்டுமே.
இவ்வாறு அவர் கூறினார்.