புத்தாண்டு தினத்தில் இருந்து பணத்தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.
Add Asianetnews Tamil as a Preferred Source


தூத்துக்குடி மாவட்டத்தில் ஓடும் தாமிரபரணி ஆற்றில் மணல் திருட்டு நடப்பதாக புகார் எழுந்ததை, தொடர்ந்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆற்றுப் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூர்வாருதல் என்ற பெயரில் மணல் கொள்ளை நடப்பதாக குற்றம்சாட்டினார். மணல் காெள்ளையை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிட்ட பாென். ராதாகிருஷ்ணன், புத்தாண்டில் ரூபாய் நோட்டு பிரச்சினைக்கு முழு தீர்வு கிடைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
