police van fire in thoothugudi

தூத்துகுடியின் போராட்டத்தில் 12 பேர் போலீஸின் துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பொதுமக்கள் அவர்கள் உடலை வாங்க மறுத்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்படவேண்டுமென மக்கள் மீண்டும் கோரிக்கை வைத்தனர்

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் இறந்தவர்கள் உடல் வைக்கப்பட்டுள்ளது அதனால் உடலை பார்க்க உறவினர்கள் குவிந்தனர். அவர்களுக்கு எதிராக காவல்துறை மீண்டும் 2முறை வானை நோக்கி சுட்டு எச்சரிக்கை விடுத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பெட்ரோல் குண்டு வீசினர். மேலும் காவலர் வாகனத்திற்கு தீ வைத்து தப்பியோடினர்.

சாலையோரமிருந்த காவல்துறை இரண்டு வாகனத்தில் தீ வைத்ததில் மீண்டும் பதட்ட நிலையை அடைந்துள்ளது தூத்துக்குடி நகரம்.