அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டே ஆட்சி மாற்றம் கேட்ட அன்புமணி..!! கட்சி தொடங்கி 30 ஆண்டு ஆட்சு என புலம்பல்..
வேறு கட்சியினர் ஆட்சி செய்ய நாங்கள் கட்சி தூங்கவில்லை . எங்கள் கட்சி ஆட்சி செய்யத்தான் பாமகவை துவங்கினோம் .
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வேண்டுமென பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார் . அவரின் பேச்சு அதிமுக பாமக கூட்டணிக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது . நடிகர் ரஜினிகாந்த் உடன் பாமக கூட்டணி அமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில் , அன்புமணி இவ்வாறு கூறியுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது . சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பொட்டனேரியில் பாமக சார்பில் முப்படைகள் சந்திப்பு என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது .
இதில் பாமக தலைவர் ஜிகே மணி தலைமை தாங்கினார் , பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கலந்து கொண்டு உரையாற்றினார் , அப்போது பேசிய அவர் , தமிழகத்தில் இளைஞர்களும் இளம் பெண்களும் சேர்ந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார் . அப்போதுதான் தமிழகத்தில் நல்ல பல திட்டங்களை செயல்படுத்த முடியும் தமிழகத்தை பாமக ஆளவேண்டும் அப்போதுதான் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் . செலவின்றி நல்ல மருத்துவ உதவிகள் அனைவருக்கும் கிடைக்கும் என்றார்.
பாமக ஆட்சிக்கு வந்தால் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்று பேசினார் . பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்தக் கட்சி துவங்கினாலும் அடுத்தது எங்கள் கட்சி ஆட்சி தான் என்பார்கள், பாமக தொடங்கி 30 ஆண்டுகளாகிறது , வேறு கட்சியினர் ஆட்சி செய்ய நாங்கள் கட்சி தூங்கவில்லை . எங்கள் கட்சி ஆட்சி செய்யத்தான் பாமகவை துவங்கினோம் . எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி நீடிக்குமா , அல்லது யாருடன் கூட்டணி என்பதை எங்கள் நிறுவன தலைவர் முடிவு செய்வார் என்றார் .