Asianet News TamilAsianet News Tamil

தமிழக மக்களே உஷார்..!! 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் காட்டு காட்டுன்னு காட்டபோகுதாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்  ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 

People of Tamil Nadu are alert, The next 24 hours will see wildfires in 11 districts.
Author
Chennai, First Published Oct 24, 2020, 1:07 PM IST

அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு  வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், 

அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு (அக்டோபர் 26,27,28) தென் தமிழக மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும். என தெரிவித்துள்ளது.  

People of Tamil Nadu are alert, The next 24 hours will see wildfires in 11 districts.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்  ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்  ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும். 

People of Tamil Nadu are alert, The next 24 hours will see wildfires in 11 districts.

கடந்த 24 மணி நேரத்தில்   திருத்தணி  (திருவள்ளூர்), நாற்றாம்பள்ளி   (திருப்பத்தூர்) 5செ.மீ. மழையும், பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), ஸ்ரீபெரும்புதூர்  (காஞ்சிபுரம்) 4 செ.மீ., அரக்கோணம்  (ராணிப்பேட்டை), கிருஷ்ணகிரி  (கிருஷ்ணகிரி), திருவண்ணாமலை  (திருவண்ணாமலை), திருவாலங்காடு (திருவள்ளூர்), ரெட்  ஹில்ஸ்  (திருவள்ளூர்), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), பரூர்  (கிருஷ்ணகிரி) 3 செ.மீ. மழையும், பதிவாகி யுள்ளது. மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள். என எச்சரிக்கப்படுகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios