Asianet News TamilAsianet News Tamil

மூன்று ’டி’க்களால் தொல்லை.. பாண்டிச்சேரியில் பொங்கிய மு.க.ஸ்டாலின்..!

’3 டி’ களால் நாட்டிற்கு தொல்லையாக உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். 

people affected by 3 d said mk stalin
Author
Tamil Nadu, First Published Apr 11, 2019, 2:17 PM IST

’3 டி’ களால் நாட்டிற்கு தொல்லையாக உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். 

புதுச்சேரியின் தட்டஞ்சாவடி பகுதியில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், ''இந்த புதுச்சேரிக்கு நான் புதிதானவன் அல்ல. புதுச்சேரியும் எனக்கு புதிதல்ல. நான் இங்கு வாக்கு கேட்க மட்டும் வரவில்லை. இந்த மாநிலத்தில் புரட்சி முதல்வராக இருக்கும், இங்கு வந்திருக்கும் முதல்வர் நாராயணசாமிக்கு நன்றி கூறவும் தான் வந்தேன். கழக தலைவர் கலைஞர் மறைவிற்கு பின்னர், அவரை கவுரவிக்கும் வகையில் பல அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். people affected by 3 d said mk stalin

கலைஞருக்கு வெண்கல சிலை, காரைக்காலில் முக்கிய சாலைக்கு கலைஞர் பெயர், மற்றும் பட்டமேற்படிப்பு மையத்திற்கு கலைஞர் பெயர் என கூறினார். எனவே அவருக்கு என் நன்றியை இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தின் முன் தெரிவித்துக் கொள்கிறேன். புதுவை மாநில உரிமைகளுக்கு குரல் கொடுத்தவர் கலைஞர்.  people affected by 3 d said mk stalin

ஆனால், அதிமுக - பாஜக கூட்டணியால் புதுச்சேரி மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. பாஜக தேர்தல் அறிக்கை பொய்யானது. எனவே தான், பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் மோடியை மோசடி என்றே கூப்பிடுங்கள் என கூறி வருகிறேன். வெளிநாடு பிரதமர் போல் மோடி செயல்படுகிறார். மக்கள் விருப்பப்படி நீங்கள் நடக்க விரும்புவதாக கூறுகிறீர்கள். அப்படி செய்ய வேண்டும் என்றால் ஆட்சியை விட்டு விலகுங்கள். அதுவே மக்கள் விருப்பம்.

 people affected by 3 d said mk stalin

நாட்டுக்கு மோடி, தமிழகத்திற்கு எடப்பாடி, புதுச்சேரிக்கு கிரண் பேடி ஆகிய 3 ‘டி’ யினால் மக்கள் பெரும் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர் என்பதே உண்மை’’ என அவர் பேசினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios