Our party gave the documents to the EC

தேர்தல் ஆணையத்திடம் எங்கள் தரப்பு ஆவணங்களை அளித்து இரட்டை இலைச்சின்னத்தை பெறுவோம் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சசிகலா மற்றும் ஓ.பி.எஸ். அணிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இந்தச் சூழலில் தேர்தல் ஆணையத்திடம் தங்கள் தரப்பு ஆவணங்களை அளித்து வெற்றி பெறுவோம் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். 

ஆர்.கே.நகரில் உள்ள அருணாச்சலேஸ்வர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "22 ஆம் தேதி நடைபெறும் விசாரணையில் எங்களிடம் இருக்கும் ஆவணங்களை சமர்பித்து இரட்டை இலையை பெறுவோம்...ஜெயலலிதாவின் திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்து அதனை நிறைவேற்றுவேன். மார்ச் 23 ஆம் தேதிக்குப் பிறகு ஆர்.கே.நகரில் பிரசாரம் மேற்கொள்வேன்." இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.