ops statement

ஊழலைப்பத்தி நீங்க பேசலாமா ?….ஸ்டாலினை நக்கலடிக்கும் ஓபிஎஸ்…

ஊழல் குறித்து  பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை என்றும் . ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் மட்டுமல்ல , இனி எந்தத் தேர்தலிலும் திமுக படுதோல்வியைத் தான் சந்திக்கும் என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் முதலமைச்சராக இருந்தபோது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஓபிஎஸ் இடையே நல்ல ஒரு புரிதல் இருந்தது. சட்டசபையில் இருவரும் ஒருவருக்கொருவர் தரும் மரியாதை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சசிகலா, ஓபிஎஸ் இடையே அதிகார சண்டை ஏற்பட்டபோதுகூட, ஸ்டாலினுடன் நெருக்கம் காட்டி ஓபிஎஸ் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்கிறார் என்றும், அதிமுகவை ஸ்டாலினிடம் அடகு வைத்துவிட்டார் என்றும் அதனால்தான் அவரை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டிய சந்தர்ப்பம் வந்ததது என தெரிவிவித்திருந்தார்.

சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திமுக எம்எல்ஏக்கள், ஓபிஎஸ்க்கு ஆதரவி தெரிவிக்கும் வகையில் நடந்த கொண்டார்கள். பொது மேடைகள், பத்திரிக்கையாளர் சந்திப்பு என எதிலுமே இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிப் பேசிக் கொண்டது கிடையாது.

இதுபோன்ற நிலையில் தற்போது ஆர்,கே.நகர் இடைத் தேர்தலில் கிக் கடுமையாக தாக்கிப் பேசிக் கொள்வது பொது மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்,கே.நகரில் மதுசூதனனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய ஓபிஎஸ், டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தேவையான நிதி ஆதாரங்கள் எங்கிருந்து திரட்டப்படும் என்பதற்கான பதிலை அவர் சொல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மக்களை எப்படியாவது ஏமாற்றி வாக்குகளை பெற்றுவிடலாம் என்று நோக் கில் நிறைவேற்ற முடியாத திட்டங்களை எல்லாம் டி.டி.வி..தினகரன் அறிவித்து உள்ளதாக குற்றம் சாட்டினார்.

அதிமுக கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்ப ஆதிக்கத்தின்கீழ் போய்விடக் கூடாது என்ற கொள்கையை நாங்கள் கடைப்பிடிப்பதால் தான், ஆர்.கே.நகர் தொகுதியின் ஒட்டுமொத்த மக்களும் எங்களுக்கு மிகுந்த வரவேற்பு கொடுப்பதாக தெரிவித்தார்.

ஆனால் எங்களுக்கு கிடைக்கும் செல்வாக்கையும், வரவேற்பையும் பார்த்து ஸ்டாலின் கலங்கிப்போய் இருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.

ஊழல் பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது? என கேள்வி எழுப்பிய ஓபிஎஸ் , திமுக வின் ஊழல்களை மக்கள் மறக்கமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.