Asianet News TamilAsianet News Tamil

தீவிரவாதிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் புகலிடமாக விளங்கும் தமிழகம்- ஸ்டாலின் அரசை விமர்சிக்கும் ஓபிஎஸ்

கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. மாறாக, சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.
 

OPS has alleged that Tamil Nadu is a haven for anti-social elements
Author
First Published Jan 3, 2023, 12:04 PM IST

சமூக விரோதிகளின் புகலிடமா?

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாகவும், மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்களை மிரட்டுவது, பொதுமக்களை மிரட்டுவது, பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது என்ற வரிசையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவல் துறையினருக்கே பாலியல் தொந்தரவு கொடுக்கும் நிலைக்கு தி.மு.க. வினர் சென்றுவிட்டார்கள். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. மாறாக, சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், தீவிரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் புகலிடமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை..! மன்னிப்பு கேட்ட திமுக நிர்வாகிகள்..! புகார் மனு வாபஸ்

OPS has alleged that Tamil Nadu is a haven for anti-social elements

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை

சென்னை, விருகம்பாக்கம், தசாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே தி.மு.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், 129-வது வட்ட தி.மு.க. இளைஞர் அணியைச் சேர்ந்த இருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாகவும், தொல்லை கொடுத்த தி.மு.க.வினரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தபோது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பின்னர் ஆளும் கட்சியினரின் தலையீட்டைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் காவல் துறையினர் விட்டுவிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. தி.மு.க.வினரின் இந்த அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.  தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை வேலியே பயிரை மேய்வது போல் அமைந்துள்ளது.

OPS has alleged that Tamil Nadu is a haven for anti-social elements

தமிழகத்தில் ஊருடுவிய கடத்தல் தாதா

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டேயிருக்கின்ற இந்த நிலையில், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் தாதா சுஞ்சிபாணி இம்ரான் மற்றும் அவருடைய கூட்டாளிகள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவி இருப்பதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழ்நாட்டில் போதைப் பொருள் கலாச்சாரம் விஸ்வரூபமாக உருவெடுத்துள்ள நிலையில், வெடிகுண்டு கலாச்சாரம் ஆரம்பித்துள்ள நிலையில், கஞ்சிபாணி இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவி இருப்பது தமிழக மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகளைப் பார்த்து, சட்டவிரோதச் செயல்களுக்கு பாதுகாப்பான இடம்

பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைகிறேனா..? வானதி சீனிவாசன் வெளியிட்ட பரபரப்பு தகவல்

OPS has alleged that Tamil Nadu is a haven for anti-social elements

கைது செய்திடுக

தமிழ்நாடு தான் என்று சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களும், தீவிரவாதிகளும் முடிவெடுத்து விட்டார்களோ என்ற ஐயம் மக்களிடையே நிலவுகிறது. ஏனென்றால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்குகின்ற சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், காவல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தி.மு.க.வினரை உடனடியாக கைது செய்து, சட்டத்தின்முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கவும், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் தலைவன் கஞ்சிபாணி இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகளை உடனடியாக கைது செய்து நாடு கடத்தவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

சூப்பர் ஸ்டார் பட்டம் நிரந்தரம் இல்லை..! உச்சத்தில் நடிகர் விஜய்.!! ரஜினி ரசிகர்களை சீண்டிய சீமான்.!

Follow Us:
Download App:
  • android
  • ios