Asianet News TamilAsianet News Tamil

ஓபிஎஸ், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் திமுக ஆட்சியைப் பாராட்டுகிறார்கள்.. காலரை தூக்கிவிடும் உதயநிதி ஸ்டாலின்!

எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி போன்றோர் திமுக அரசை பாராட்டி பேசுகிறார்கள். அந்த அளவுக்கு திமுக ஆட்சியின் செயல்பாடு உள்ளது என்று திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
 

OPS and SP Velumani praise the DMK rule .. Udayanithi Stalin to lift the collar!
Author
Pudukkottai, First Published Sep 11, 2021, 10:09 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகரணத்தில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “தமிழக சட்டப்பேரவையில் மக்களின் வளர்ச்சிக்காக 110 விதியின் கீழ் முத்து முத்தான அறிவிப்புகளை முதல்வர் தொடர்ந்து வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையில் திமுக அரசை எதிர்த்து யாருமே பேசுவதில்லை. எதிர்த்து பேசுபவர்கள்கூட வெளிநடப்பு செய்துவிடுகிறார்கள். எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி போன்றோர் திமுக அரசை பாராட்டி பேசுகிறார்கள். அந்த அளவுக்கு திமுக ஆட்சியின் செயல்பாடு உள்ளது.OPS and SP Velumani praise the DMK rule .. Udayanithi Stalin to lift the collar!
தேர்தல் அறிக்கையில் சொன்னதைப்போல பெட்ரோல், ஆவின் பால் விலை குறைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு நகர பேருந்தில் இலவச பயணம் உள்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதேநிலையில் அரசின் செயல்பாடு தொடர்ந்தால் மீண்டும் திமுக ஆட்சிதான் வரும். அதிமுக ஆட்சியில் 6 மாதங்களில் 50 லட்சம் பேருக்குதான் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தார்கள். ஆனால், மத்திய அரசிடமிருந்து கூடுதல் தடுப்பூசிகளைப் பெற்று 3.70 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் 110 நாட்களில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.OPS and SP Velumani praise the DMK rule .. Udayanithi Stalin to lift the collar!
கட்சியில் புதிதாக சேர்ந்தவர்கள், ஏதோ வந்தோம், புகைப்படம் எடுத்துக்கொண்டோம் என்று இருக்காமல், கட்சிக்கு தொடர்ந்து பணி செய்ய வேண்டும்” என்று உதய நிதி ஸ்டாலின் பேசினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios