Non risk நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு  தான் தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றவர்,  high risk நாட்டுக்கு மட்டும் இன்றி, வெளிநாடுகளில் இருந்து பன்னாட்டு விமானநிலையத்திற்கு வரும் அனைவரும் வீடுகளில் தனிமை படுத்திக்கொண்டு 7 நாட்களுக்கு பின்னர் ஆர்.டி.பி.ஆர் பரிசோதனையில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என  உத்தரவு பிறபிக்க கோரி மத்திய அரசுக்கு  கடிதம் எழுத உள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் ஏற்கனவே ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 28 பேருக்கு அதன் அறிகுறி இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதிக ஆபத்துள்ள நாடுகளிலிருந்து வந்த 12,767 பேரில் 2101 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 70 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு அதில் 28 பேருக்கு ஒமைக்கிரான் வைரஸ் அறிகுறி இருப்பதாக அவர் கூறியுள்ளார். 

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவில் இருந்து உருவான கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. இதுவரை கொரோனா வைரசால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டு வர முடியாமல் பல நாடுகள் திணறி வருகின்றன. இந்தியா போன்ற நாடுகள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கி மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றன. ஆனாலும் கொரோனா வைரஸ் என்பது அடிக்கடி உருமாறி உயிர்ப்புடன் தொடர்கிறது. கொரோனா வைரஸ் டெல்டாவாக மாறி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பிறழ்வுகளுடன் ஒமைக்ரான் வைரசாக அது பரிணமித்துள்ளது. இந்த வைரஸ் அதிக மாறுபாடு கொண்டுள்ளதால் இந்த வைரஸ் உலக அளவில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வைரசை தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகளில் இந்திய அரசு ஈடுபட்டு வரும் நிலையில் சுமார் 68க்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் தமிழகத்தில் அந்த வைரஸ் தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டிருப்பதாக நேற்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக சென்னை வந்த நபருக்கு ஒமிக்கிரான் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவர் நலமுடன் இருப்பதாகவும், தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் அவரது குடும்பத்தினர் 6 பேர் அவரோடு தொடர்பில் இருந்த வளசரவாக்கத்தை சேர்ந்த நபர் உள்ளிட்டவர்களுக்கு ஒமைகிரான் பாதிப்பு உள்ளதாக அச்சம் இருப்பதாகவும், மரபணு பரிசோதனை மறுஆய்வுக்காக மீண்டும் பெங்களூருவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார். இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி சேவைகளை குறுஞ்செய்தி மூலமாக நினைவூட்டும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று துவக்கித்தார். 

பின்னர் செய்தியாளர்க்ளை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்திற்கு High risk - நாட்டில் இருந்து வந்த 12767 பேருக்கும், மற்ற வெளிநாட்டில் இருந்து வந்த 2101 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தமாக 14868 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 70 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 5 பேருக்கு மறு ஆய்வில் நெகட்டிவ் வந்துள்ளதை அடுத்து 65 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் தற்போது ஒருவருக்கு ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 28 பேருக்கு s gene drop என்ற ஒமிக்ரான் வகை கொரோனா அறிகுறி இருப்பதாகவும் அவர்கள் மரபணு முடிவுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர், ஆக்சிஜன் வசதி இவர்களுக்கு தேவைப்படவில்லை லேசான அறிகுறி மட்டுமே உள்ளது என்றார். 

கொரோனா கண்டறியப்பட்டவர்கள் மாதிரிகள் பெங்களுருக்கு அனுப்பி உள்ள நிலையில் 10 பேர் முடிவுகள் வந்துள்ளதாகவும், அதில் 8 பேருக்கு டெல்டா, ஒருவருக்கு ஒமிக்ரான், ஒரு வருக்கு non sequence வந்துள்ளது அவருக்கு மட்டும் மறு ஆய்வு செய்யப்படும் என்றார். Non risk நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு தான் தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றவர், high risk நாட்டுக்கு மட்டும் இன்றி, வெளிநாடுகளில் இருந்து பன்னாட்டு விமானநிலையத்திற்கு வரும் அனைவரும் வீடுகளில் தனிமை படுத்திக்கொண்டு 7 நாட்களுக்கு பின்னர் ஆர்.டி.பி.ஆர் பரிசோதனையில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என உத்தரவு பிறபிக்க கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாக தெரிவித்தார்.மேலும் அவர்கள் அனைவருக்கும் விமானநிலைத்திற்கு வந்தவுடன் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யவும் அனுமதி அளிக்குமாறும் கடித்தம் எழுத உள்ளதாக தெரிவித்தார்.ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட வருடன் தொடர்புடைய 278 நபர்களுக்கு ஆர்.டி.பி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகவதாக அப்போது தெரிவித்தார்.