Asianet News TamilAsianet News Tamil

ரவுடி போல் கல் வீச்சில் ஈடுபட்ட அமைச்சர்..! இதுவே ஜெயலலிதா ஆட்சியாக இருந்தால் பதவி பறிபோயிருக்கும்- ஓபிஎஸ்

தி.மு.கவினர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகளால் தூக்கமே போய்விட்டது என்று வருத்தப்பட்டுமுதலமைச்சர் அவர்களே கூறிய நிலையில், ஓர் அமைச்சர் ரவுடி போல செயல்படுகிறார் என்றால் முதலமைச்சரின் வார்த்தையை அவர் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது என ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.
 

O Panneer Selvam criticizes minister Nasser who was involved in stone pelting like a rowdy.
Author
First Published Jan 25, 2023, 2:07 PM IST

வேலியே பயிரை மேய்கிறது

தமிழக அமைச்சர் நாசர் கல் வீச்சு சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களே சட்டம்-ஒழுங்கை சீரழிப்பது என்பது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. இந்தச் செயலை செய்துள்ள மாண்புமிகு பால் வளத் நுறை அமைச்சர் திரு. சா.மு. நாசர் அவர்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதலில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

சட்டப்பேரவை நிகழ்வை செல்போனில் வீடியோ பதிவு.! ஆளுநரின் விருந்தினர் மீது நடவடிக்கையா.? அவை உரிமை குழு விசாரணை

ரவுடியை போல் கல் வீசிய அமைச்சர்

திருவள்ளூர் மாவட்டத்தில், தி.மு.க. சார்பில் இன்று நடைபெறவுள்ள மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் பொதுக் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பேச உள்ள நிலையில், அந்தப் பணிகளை பார்வையிட சென்ற மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு. சா.மு. நாசர் அவர்கள், அங்கு நாற்காலிகள் போடாததால் ஆத்திரம் அடைந்து, தான் அமைச்சர் என்பதையும் மறந்து, ஒரு ரவுடி போல கல் வீச்சில் ஈடுபட்டுள்ளார் என்ற செய்தி இன்று பத்திரிகைகளில் புகைப்படுத்துடன் வெளி வந்துள்ளது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது பணிகளை மேற்கொள்வேன் என்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ஓர் அமைச்சர், அதனை முற்றிலும் அவமதிக்கும் வகையில் பணிகளை மேற்கொள்வது என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படுவதற்கு சமம். 

ஆர்எஸ்எஸ் கொள்கையை திணிக்க முழு மூச்சாக செயல்படும் ஆர்.என்.ரவி! திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை-செல்வப்பெருந்தகை

O Panneer Selvam criticizes minister Nasser who was involved in stone pelting like a rowdy.

வெட்கக்கேடான செயல்

தி.மு.கவினர் மற்றும் அமைச்சர் பெருமக்களின் செயல்பாடுகளால் தூக்கமே போய்விட்டது என்று வருத்தப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே கூறிய நிலையில், ஓர் அமைச்சர் ரவுடி போல செயல்படுகிறார் என்றால் முதலமைச்சரின் வார்த்தையை அவர் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட ஓர் சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை என்றே மக்கள் கருதுகிறார்கள். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய ஓர் அமைச்சர் சட்டம் ஒழுங்கை சீரழிக்கிறார் என்பது ஒரு . வெட்கக்கேடான செயல். 

O Panneer Selvam criticizes minister Nasser who was involved in stone pelting like a rowdy.

இதுவே ஜெயலலிதாவாக இருந்தால்.?

மாண்புமிகு அமைச்சர்கள் இதுபோன்ற ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டபோது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வேண்டுகோள் விடுப்பதைத் தவிர்த்து கடும் நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான செயல் நடைபெற்றிருக்காது. மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்து ஓர் அமைச்சர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பாரேயானால், அவருடைய பதவி பறி போயிருக்கும். இதுபோன்ற நடவடிக்கை தான் சட்டம்-ஒழுங்கு சீராக செயல்பட வழி வகுக்கும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

திமுகவோடு கை கோர்த்து அதிமுக,பாஜகவை எதிர்க்கும் கமல்..! இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ்க்கு ஆதரவு.! அதிரடி அறிவிப்பு

Follow Us:
Download App:
  • android
  • ios