Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நாட்டில் உள்ள மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கும் வகையில், ரூ.7.5 லட்சம் வரை வங்கியில் 10 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் ஆண்டுக்கு 8 சதவீதம் வட்டி வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை தடை செய்த அறிவித்தபின், ஏறக்குறைய 50 நாட்களுக்கு பின் பிரதமர் மோடி நாட்டுக்கு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அவர் மூத்த குடிமக்களுககான திட்டம் குறித்துக் கூறுகையில், “ நாட்டில் உள்ள மூத்த குடிமக்களுக்கா சிறப்புத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் தங்களிடம் இருக்கும் பணத்தில் ரூ. 7.5 லட்சம் முதல் வங்கியில் 10 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால், அவர்களுக்கு ஆண்டுக்கு 8சதவீதம் வட்டி வழங்கப்படும். இந்த வட்டி மாதம்தோறும் அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். ’’ எனத் தெரிவித்தார்.