நீட் தேர்வு – ரயில் நேர மாற்றம்
தமிழகத்திலிருந்து சுமார் 33000 மாணவர்கள் நீட் தேர்வுக்காக கேரளா மாநிலம் செல்ல வேண்டியுள்ளது இதனால் அவர்களுக்கான ஏற்பாடுகளில் ஒன்றாக
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களின் கோரிக்கையை ஏற்று ரயில்வே துறை நாளை காலை நாகர்கோவில்- மங்களூர் ரயில் 2 மணிக்கு புறப்படும் எனத் தெரிவித்துள்ளது.
மற்ற நாட்களில் இந்த ரயில் 3.30க்கு புறப்படும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக இந்த நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மணிக்கு புறப்படும் இந்த ரயில் காலை 6.45 க்கு எர்ணாகுளம் சென்றடையும் . இது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்