Asianet News TamilAsianet News Tamil

சீரியஸ் கண்டிசனில் நடராஜன்…. மீண்டும் பரோலில் வருவாரா சசிகலா ?

Natarajan in hospital sasikala wil come Parole
Natarajan in hospital sasikala wil come Parole
Author
First Published Mar 19, 2018, 11:19 AM IST


சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புதிய பார்வை பத்திரிகை ஆசிரியர் ம.நடராஜனின்   உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் அவரைப் பார்க்க பெங்களூரு பரபப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா பரோலில் சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
அவரது சென்னையை அடுத்துள்ள பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்டார்.

Natarajan in hospital sasikala wil come Parole

அவரது கல்லீரல், சிறுநீரகம் இரண்டையும் மாற்ற வேண்டும் என்கிற நிலை உருவானது. இதனை தொடர்ந்து தஞ்சையை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த இரு உறுப்புகளையும் நடராஜனுக்கு தானமாக தந்தார். இதையடுத்து உடல் உறுப்பு மாற்று ஆபரே‌ஷன் மூலமாக நடராஜனுக்கு மாற்று கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை பொறுத்தப்பட்டன. இதன் பின்னரே நடராஜன் உயிர் பிழைத்தார். அப்போது அவரைப்ப பார்க்க சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா பரோலில் வந்தார்.

இந்த நிலையில் நடராஜனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சு திணறலாலும் அவதிப்பட்டார். ஏற்கனவே சிகிச்சை பெற்ற குளோபல் ஆஸ்பத்திரியில் உடனடியாக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் நடராஜனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Natarajan in hospital sasikala wil come Parole

நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்கு செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை பார்க்க சசிகலா பரோலில் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் அவரது வழக்கறிஞர் இன்று  பரோல் கேட்டு விண்ணப்பிக்க உள்ளதாக தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios