Asianet News TamilAsianet News Tamil

சிவக்கொழுந்து அறிவிப்பால் சிதைந்து போன நாராயணசாமி நம்பிக்கை..!

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார்.

Narayanasamy hope shattered by Sivakozhunthu announcement
Author
Pondicherry, First Published Feb 22, 2021, 11:41 AM IST

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார்.
 
புதுச்சேரி சட்டபேரவையில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். புதுச்சேரி சட்டப்பேரவை 10 மணிக்கு கூடிய நிலையில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய முதல்வர், ஐந்து ஆண்டு கால ஆட்சி குறித்து 40 நிமிடங்கள் பேசிய நிலையில், நியமன எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கக்கூடாது என அரசு கொறடா எதிர்ப்பு தெரிவித்தது.இதில் பெரும்பான்மையை காங்கிரஸ் அரசு இழந்தது என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது என்றும் சபாநாயகர் அறிவித்தார். இதனையடுத்து புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. Narayanasamy hope shattered by Sivakozhunthu announcement

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்துள்ளார். முதல்வர், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளியேறிய நிலையில் சபாநாயகர் அறிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துப் பேசிய முதல்வர் நாராயணசாமி பேரவையில் இருந்து வெளியேறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios