Asianet News TamilAsianet News Tamil

பக்கத்து வீட்டுக்காரிக்கு ரெட்ட புள்ள... வயிற்றெரிச்சலில் டி.டி.வி... அதிமுக தாறுமாறு விமர்சனம்..!

அந்நிய செலாவணி மோசடி, ஹவாலா பரிவார்த்தனைகள் என்றெல்லாம் தேச விரோத குற்றங்களில் ஈடுபட்டு சென்னை மத்திய சிறை, கடலூர் மத்திய சிறை என்றெல்லாம் சிறைவாசம் சென்று பிறகு தண்டனையில் இருந்து தப்பிக்க நான் இந்திய பிரஜையே இல்லை என்று பீலா விட்டு கொன்றுக்கும் தினகரனை அதிமுக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

namathu amma attack in ttvdinakaran
Author
Tamil Nadu, First Published Nov 21, 2019, 2:11 PM IST

அந்நிய செலாவணி மோசடி, ஹவாலா பரிவார்த்தனைகள் என்றெல்லாம் தேச விரோத குற்றங்களில் ஈடுபட்டு சென்னை மத்திய சிறை, கடலூர் மத்திய சிறை என்றெல்லாம் சிறைவாசம் சென்று பிறகு தண்டனையில் இருந்து தப்பிக்க நான் இந்திய பிரஜையே இல்லை என்று பீலா விட்டு கொன்றுக்கும் தினகரனை அதிமுக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் "மிஸ்டர் டோக்கனார், கழகத்தின் ஆட்சி அதிகாரங்களையும், கழகத் தொண்டர்னின் உதிரத்தையும் மண்ணுளி பாம்புகளாய் மறைந்திருந்து கொண்டு கால் நூற்றாண்டு காலமாக உறிஞ்சிக் கொழுத்து ஆட்டம் போட்டதும், ஆட்டய போட்டதும், ஆல்கஹால் மதுபான ஆலைகள் தொடங்கி ஆயிரம் ஆயிரம் கோடிகளை கொள்ளையடித்து குவித்துவிட்டு இன்று ஜெயிலிலும், பெயிலிலும் இருப்பவர்கள் யார்?

namathu amma attack in ttvdinakaran

நகைக்கடை அதிபர் தொடங்கி, இசையமைப்பாளர் வரை ஒருவர் விடாமல் மோசடிகள் செய்து மாஃபியாக்கள் என்று மக்களிடம் மகுடம் சூட்டிக்கொண்டது யார்? ஏழைகளுக்கான சொர்க்கம் இதுவென்று புரட்சித்தலைவர் அடையாளம் காட்டிய பொன்மனத்து இயக்கத்தின் புனிதத்தில் கறை பூசும் வண்ணம் கழகத்தின் ஆட்சி அதிகாரத்தை திரைமறைவில் இருந்து சுரண்டி கொழுத்து லண்டன் வரை சொத்துக்கள் வாங்கி குவித்து இன்று பொருளாதார நீதிமன்றங்களில் இருபத்தெட்டு கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு பிணையில் இருக்கும் குற்றவாளி யார்?

அந்நிய செலாவணி மோசடி, ஹவாலா பரிவார்த்தனைகள் என்றெல்லாம் தேச விரோத குற்றங்களில் ஈடுபட்டு சென்னை மத்திய சிறை, கடலூர் மத்திய சிறை என்றெல்லாம் சிறைவாசம் சென்று பிறகு தண்டனையில் இருந்து தப்பிக்க நான் இந்திய பிரஜையே இல்லை என்று பீலா விட்டது யார்?

namathu amma attack in ttvdinakaran

சின்னத்தை பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கே கையூட்டு கொடுக்க முனைந்து கையும், களவுமாக அகப்பட்டு டெல்லி திகார் சிறைக்கு புனிதப் பயணம் போய்வந்த புண்ணியவான் யார்? ஆக, ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்டம் போட்டதும், ஆட்டய போட்டதும் அப்படி அடித்துக் குவித்த கொள்ளை பணத்தை வைத்து ஆர்.கே.நகர் மக்களை ஏமாற்ற டோக்கன் போட்டதும் நீங்க தானே?

namathu amma attack in ttvdinakaran

ஆனால், இன்றைக்கும் மாஃபியாக்கள் இல்லாத இயக்கமாக மக்கள் திலகம் கண்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தீட்டு கழிக்கப்பட்ட புனிதமாக திகழ்கிறது. அம்மாவின் மறைவு வரை பாண்டிச்சேரி பக்கமா பதுங்கு குழிகளில் ஒளிந்து கிடந்த பேர்வழி அண்ணா திமுகவை அபகரிக்க முடியவில்லையே என்கிற எரிச்சலும், நமைச்சலிலும் கழகத்தையும், கழகத்தின் ஆட்சியையும் பழிப்பது அண்டை வீட்டுக்காரிக்கு ரெட்ட புள்ள பிறந்ததுன்னு அம்மி குளவியை எடுத்து அடி வயிற்றில் அடித்துக் கொண்டாளாம் வயிற்றெரிச்சல்காரி என்னும் கதை தான் இப்படி முட்ட போண்டாவின் முனகலும் புலம்பலும்" என விமர்சனம் செய்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios