முன்னாள் திமுக எம்எல்ஏவின் மகன் மர்ம மரணம்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர், தொண்டர்கள்..!
கும்பகோணம் ரயில் நிலையம் அருகே மர்மமான முறையில் திமுக முன்னாள் எம்எல்ஏ மகன் உயிரிழந்த பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம் ரயில் நிலையம் அருகே மர்மமான முறையில் திமுக முன்னாள் எம்எல்ஏ மகன் உயிரிழந்த பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் கோட்டுச்சேரி முத்துசாமி பிள்ளை வீதியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவர் கோட்டுச்சேரி தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ ஆவார். இவரது மகன் வெற்றிச்செல்வன் (42). இவரது மனைவி ராஜேஸ்வரி (34). இவர்களுக்கு ஹன்சிகா (6) என்ற மகளும் உள்ளார். இந்நிலையில், வெற்றிச்செல்வன் கடந்த 21ம் தேதி முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. கோட்டுச்சேரியில் இருந்து காரில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும், அவரது நண்பர்களிடம் விசாரித்த போதும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, அவரது மனைவி கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், கும்பகோண ரயில் நிலையத்தில் கார் ஒன்று நீண்ட நேரமாக ஒரே இடத்தில் இருந்ததாகவும், காரின் அருகில் ஒருவர் மயங்கிய நிலையில் இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காரின் அருகே சடலமாக கிடந்தார். காரில் இருந்த செல்போனை எடுத்து போலீசார் ஆய்வு செய்ததில் உயிரிழந்தவர் கோட்டுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ பஞ்சவர்ணத்தின் மகன் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, வெற்றிசெல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மர்ம மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கோட்டுச்சேரியை சேர்ந்த வெற்றிசெல்வன் கும்பகோணம் வரக்காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக முன்னாள் எம்எல்ஏவின் மகன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.