Asianet News TamilAsianet News Tamil

சாதி பற்றி பேசும் வம்புக்காரி.. வீண் வம்பு இழுக்கும் விஷமக்காரி... மீராமிதுன் மீது எம்.எஸ்.பாஸ்கர் ஆங்காரம்..!

குறிப்பிட்ட சாதியினரை திரை உலகை விட்டு துரத்த வேண்டும் என்று சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? இவரது பேச்சு மனதை புண்படுத்தும் விஷயம் மட்டுமல்ல, மடத்தனம்.

MS Bhaskar's anchor on Meeramidun ..!
Author
Tamil Nadu, First Published Aug 10, 2021, 6:17 PM IST

சமீபத்தில் பட்டியலின மக்கள் குறித்தும், நடிகர் கமல்ஹாசன் குறித்தும் சர்ச்சையாக பேசியிருந்தார் பிக்பாஸ் பிரபலமமும், மாடலுமான மீரா மிதுன். இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.MS Bhaskar's anchor on Meeramidun ..!
 
இதுகுறித்த் அவரது அறிக்கையில், “என்னவாயிற்று இந்த பெண்ணுக்கு? உன் போதைக்கு நான் ஊறுகாயா? என்று காமெடியாக கேட்பார்கள். ஆனால் மீரா மிதுன் சமீபத்தில் பேசியிருப்பது காமெடியல்ல, வீணாக வம்புக்கு இழுக்கும் விஷமத்தனம். சாதிப் பெயரை சொல்லி பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது. எவ்வளவோ சாதித்தவர்கள் பலர் அடக்கமாக இருக்கும் போது, இவர் ஏன் இவ்வளவு ஆணவமாக பேசுகிறார்?MS Bhaskar's anchor on Meeramidun ..!

சாதனைக்கும், அறிவுக்கும், சாதிக்கும் சம்பந்தம் ஏது? பெருமதிப்பிற்குரிய என் தெய்வம் கலைஞானி கமலஹாசன் அவர்கள் தன்னை ஒரு படத்திலிருந்து ஒதுக்கித்தள்ளி விட்டார் என்று இவர் கூறியிருப்பதை கேட்டு அழுவதா, சிரிப்பதா? ஈர்க்குச்சியை ஒதுக்கித்தள்ள யானை வேண்டுமா? என்ன மூடத்தனமான பேச்சு இது? தளபதி விஜய், தம்பி சூர்யா ஆகியோர் பண்பின் சிகரங்கள். அவர்களுக்கு அடுத்து இவரது வசைபாடலில் இன்று கலைஞானி அவர்களா?MS Bhaskar's anchor on Meeramidun ..!

குறிப்பிட்ட சாதியினரை திரை உலகை விட்டு துரத்த வேண்டும் என்று சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? இவரது பேச்சு மனதை புண்படுத்தும் விஷயம் மட்டுமல்ல, மடத்தனம். அகங்காரத்தின் உச்சம். மற்றவர்கள் மனதை புண்படுத்தி விளம்பரம் தேடுவது கயமைத்தனம். இத்தகைய பேட்டிகளை யூ ட்யூப் சேனல்கள் புறக்கணித்தாலே இப்படிப்பட்ட வம்புக்காரர்களின் வாயை அடைத்து விடலாம். மிகுந்த மனவேதனையோடு வன்மையாக இவரை கண்டிக்கிறேன். இனியாவது இவர் நாவடக்கத்தோடு இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios