Asianet News TamilAsianet News Tamil

OPS vs EPS : இபிஎஸ்க்கு பூங்கொத்து கொடுக்கும் ஓபிஎஸ்..! பொதுக்குழு வளாகத்தில் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு வைக்கப்பட்ட பேனரில் இபிஎஸ்க்கு ஓபிஎஸ் பூங்கொத்து வழங்குவது போன்ற காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More than 2,000 policemen will be on security duty at the AIADMK General Assembly premises
Author
Chennai, First Published Jun 22, 2022, 10:00 AM IST

பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரம்

அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதற்கான  இறுதிகட்ட பணிகள் தயார் நிலையில் உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடிய 2600 செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை, மேலும் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் உள்ளது. குறிப்பாக திமுக அரசிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தீர்மானங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை திமுக அரசு நிறுத்திவைத்துள்ளது.

குறிப்பாக தாலிக்கு தங்கம் திட்டம், மடிக் கணிணி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது இதனை கண்டிக்கும் வகையில் தீர்மானங்கள் கொண்டு வரப்படவுள்ளன. மேலும் மேகதாது திட்டத்தை செயல்படுத்த நினைக்கும் கர்நாடக அரசிற்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. பெட்ரோல்,டீசல் விலையை குறைப்பதாக வாக்குறுதி கொடுத்து நிறைவேற்றாத தமிழக அரசை கண்டிக்கும் வகையிலும் தீர்மானங்கள் இயற்றப்படவுள்ளது.

More than 2,000 policemen will be on security duty at the AIADMK General Assembly premises

இபிஎஸ்கு பூ கொடுக்கும் ஓபிஎஸ்

 இதில் முக்கியம் மற்றும் சிறப்பு தீர்மானமாக அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது. அதில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இந்தநிலையில் பொதுக்குழு நடைபெறும் இடத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுக்குழு வளாகத்திற்குள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள நிர்வாகிகள் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக அடையாள அட்டை தயார் செய்து பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

More than 2,000 policemen will be on security duty at the AIADMK General Assembly premises

புகைப்பட அடையாள அட்டை

இந்த நிலையில் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பொது குழுவிற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வழி நெடுவிலும் பேனர்கள் அமைக்கப்பட்டு வருகிறது. ஒற்றை தலைமை விவகாரம் தொடர்ச்சியாக அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுக்குழு நடைப்பெற உள்ள வானகரத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பூங்கொத்து அளித்துக்கொள்வது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அதிமுக நிர்வாகிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பார்த்தவாறு செல்கின்றனர்.

இதையும் படியுங்கள்
 

அதிமுகவில் சர்வாதிகார போக்கு...! "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" - ஓபிஎஸ்

Follow Us:
Download App:
  • android
  • ios