mofoi press meet
ஆர்.கே.நகர்ல ஜெயிக்கிறோம்…ஜெயலலிதா மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை அமைக்கிறோம்…சுழன்றடிக்கும் மாபா
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனன் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும், இந்த தேர்தலில் ஜெயித்தவுடன், ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றும் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், இந்த இடைத் தேர்தலுக்குப் பின் ஓபிஎஸ் தலைமையில் மீண்டும் அதிமுக ஒன்றிணையும் என்றும் தொடர்ந்து இரட்டை இலையை மீட்போம் என்றும் தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு தொடர்பான நீதி விசாரணை வெற்றி பெற்ற ஒருவாரத்தில் அமைக்கப்படும் என்றும் . ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் புனித நினைவு இல்லமாக மாற்றப்படும் என்றும் தெரிவித்தார்..
மேலும், நாட்டிலேயே முதல் முறையாக, நடமாடும் எம்எல்ஏ அலுவலகம் ஆர்,கே.நகரில் கொண்டுவரப்படுகிறது. மக்களை தேடி எம்எல்ஏ என்ற அடிப்படையில். வெற்றி பெற்ற 100 நாட்களில் இந்த சேவை தொடங்கப்படும் என தெரிவித்தார்.
இதன் படி ஒரு வாகனம் தினசரி தொகுதி முழுவதும் சுற்றி வரும் என்றும். அதில் மனுக்கள் பெறுதல், அரசு திட்டங்கள் விழிப்புணர்வு, இ-சேவை மையம், 'மை ஆர்.கே.நகர்' எனும் செல்பேசி செயலியை நடைமுறைப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அந்த வாகனத்திலேயே பொதுமக்கள் தங்கள் குறையை கூறினால், அதை பதிவு செய்து, சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி நிறைவேற்றப்படும் என்றும் பாண்டியராஜன் கூறினார்.
