முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க பிரதமர் மோடி‌ விரைவில் சென்னை வருவார் என மத்திய‌‌ ‌‌அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூரில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பேசும்போது, இந்த ஆண்டு தமிழகத்தில் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடைபெறும் என தெரிவித்தார்.

மேலும், தமிழக முதலமைச்சர் குறித்து கேட்டறிய பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், முதலமைச்சரை காண உரிய நேரத்தில் மோடி சென்னை வருவார் என்றும் பொன்.ராதா தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ், தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.