மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் எனவும், அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் எதிர்த்து விவசாயிகள் தொடர் போரட்டங்கள் நடத்தி வந்தனர். டெல்லியின்எல்லைப்பகுதிகளிலும், பிறமாநிலங்களிலும்விவசாயிகள்நடத்தியபோராட்டம், நாடுமுழுவதும்பெரும்கவனம்பெற்றது. குடியரசுத்தினத்தன்றுவிவசாயிகள்போராட்டத்தைதீவிரப்படுத்தியநிலையில், டிராக்டர்பேரணியின்போதுவன்முறைவெடித்தது.டிராக்டர்கவிழ்ந்ததில்விவசாயிஒருவர்உயிரிழந்தார். 500-க்கும்மேற்பட்டகாவல்துறையினர்காயமடைந்தனர்.அதனை தொடர்ந்து பல விவசாய சங்கங்கள் போராட்டத்தினை வாபஸ் பெற்றனர்.

டெல்லி- உத்தரப்பிரதேசத்தின்முக்கியஎல்லையானகாசிப்பூரில்போராடிவந்தபெரும்பாலானவிவசாயிகள்சொந்தஊருக்குதிரும்பினார்கள். இதனால், இந்தப்போராட்டம்முடிவுக்குவந்ததாககருதப்பட்டபோதிலும் பாரதிய கிசான் சங்கம் உள்ளிட்ட ஒரு சில விவசாய சங்கங்கள் தங்கள் போராட்டதினை மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் வரை தொடர்வதாக அறிவித்தனர். பஞ்சாய் – டெல்லி, ஹரியானா – டெல்லி போன்ற தலைநகரின் முக்கிய சாலையில் விவசாயிகள் பகல் , இரவு பாராமல் தொடர் போராட்டம் நடந்தினர். குளிர், வெயில் பொருட்படுத்தாமல் விவசாயிகளின் போராட்டம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மத்திய வேளாண் அமைச்சர்கள் தலைமையில் விவசாய சங்கங்களுடன் பல தரப்பட்ட பேச்சு வார்த்தைகள் நடத்துப்பட்டு, அனைத்தும் தோல்வியையே தழுவியது. மூன்று சட்டங்களையும் ரத்து செய்தால் மட்டுமே தாங்கள் போராட்டத்தினை கைவிடுவோம் என விவசாயிகள் தங்கள் நிலைபாட்டில் உறுதியாக இருந்தனர்.

இந்நிலையில், நேற்று நாட்டு மக்களிடையே உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக அதிரடியாக அறிவித்தார். இதைவரவேற்று, போராடும்விவசாயிகள்அனைவரும்இனிப்புவழங்கிகொண்டாடினர். இருப்பினும், மூன்றுவேளாண்சட்டங்கள்ரத்துஎனபிரதமர்மோடிஅறிப்பாகத்தான்வெளியிட்டிருக்கிறார். சட்டபூர்வமாக, எழுத்துபூர்வமாககையெழுத்தாகி, அதைநாடாளுமன்றத்தில்அதிகாரபூர்வமாகஅறிவிக்கும்வரைஎங்களின்போராட்டத்தைவாபஸ்பெறமாட்டோம்எனவும் தொடர்ந்துபோராட்டம்நடைபெறும்எனவும் தெரிவித்துள்ளனர்.

தற்போது பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்புக்கு கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் என கூறியுள்ளார். மேலும் அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் எனவும் வேளாண் விரோதச் சட்டங்களை உறுதியாக எதிர்த்ததும்,மநீம தலைவர்கள் டெல்லி சென்று போராடியதும் பெருமைகொள்ளத்தக்க வரலாற்றுத் தருணங்கள் எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
