கொரோனா, பறவை காய்ச்சல் எது வந்தாலும் தமிழகம் சமாளிக்கும்..!! கெத்து காட்டும் கால்நடைத்துறை அமைச்சர்..!!
கொரோனா , பறவைக்காய்ச்சல் என எது வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை தமிழகத்திடம் உள்ளது எனக் கூறியுள்ளார் . கொரோனா பற்றி தெரிவித்துள்ள அவர் தமிழகத்தில் இதுவரை எந்தவிதமான பிரச்சினையும் இல்லை , ஆகையால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை
தமிழகத்தில் கொரோனா பறவைக்காய்ச்சல் என எது வந்தாலும் சமாளிக்கும் திறன் தமிழகத்திற்கு உள்ளது என உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் தமிழகத்தில் யாருக்கும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை , அதனால் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார் . சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது . இந்தியாவிலும் இதன் தாக்கம் தொடங்கியுள்ளது . கடந்தவாரம் 6ஆக் உள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது 47 ஆக உயர்ந்துள்ளது . இந்நிலையில் நிலைமையை சமாளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார் . வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பலர் கொரோனா தொற்றுடன் வருவதால் இங்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது .
தமிழ்நாடு , கேரளா, மட்டுமல்லாது . இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது . பஞ்சாப் , டெல்லி , உத்தரப் பிரதேசம் , ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் கோரானாவுக்கு ஆளாகியுள்ளனர் . இவர்கள் அனைவரும் ஈரான் , அமெரிக்கா , உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா திரும்பியவர்கள் அவர் . அதேபோல் தமிழகத்திலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது . ஓமனில் இருந்து இந்தியா வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் அவர் பாதுகாப்புடன் இருப்பதுடன் அவர் மெல்ல வைரஸ் காய்ச்சலில் இருந்து குணமாகி வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் . ஆகவே தமிழக மக்கள் இந்த வைரசுக்கு அஞ்சத் தேவையில்லை எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார் . இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ,
கொரோனா , பறவைக்காய்ச்சல் என எது வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை தமிழகத்திடம் உள்ளது எனக் கூறியுள்ளார் . கொரோனா பற்றி தெரிவித்துள்ள அவர் தமிழகத்தில் இதுவரை எந்தவிதமான பிரச்சினையும் இல்லை , ஆகையால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை . அதேபோல் பறவைக்காய்ச்சல் பீதியையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து கோழிப்பண்ணைகளும் தீவிர கண்காணிப்பில் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார் . இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா வைரஸின் நிலவரம் குறித்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , தமிழகத்தில் 8 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வில் 7 பேருக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்துள்ளது என டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார் . அதேபோல் தமிழகத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா இல்லை எனவும் கூறுகின்றனர் ஆனாலும் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.