Asianet News TamilAsianet News Tamil

திமுக நடத்துவது கிராம சபையா? அல்லது குண்டர் சபையா? ஸ்டாலினை வெளுத்து வாங்கும் அமைச்சர் ஜெயக்குமார்..!

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டங்களில் விடுக்கும் மிரட்டல்களுக்கு அதிமுக அரசு ஒருபோதும் அஞ்சாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

minister jayakumar slams mk stalin
Author
Chennai, First Published Jan 3, 2021, 4:47 PM IST

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டங்களில் விடுக்கும் மிரட்டல்களுக்கு அதிமுக அரசு ஒருபோதும் அஞ்சாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

பொங்கல் பண்டிகையை ஒட்டி குடும்ப அட்டை ஒன்றுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி சென்னை தரமணி பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பையும், 2,500 ரூபாயையும் வழங்கினார்.

minister jayakumar slams mk stalin

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்;- எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டங்களில் விடுக்கும் மிரட்டல்களுக்கு அதிமுக அரசு ஒருபோதும் அஞ்சாது. திமுக நடத்துவது கிராம சபையா? அல்லது குண்டர் சபையா? எனக் கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் திறமை இருப்பவரே உண்மையான தலைவராக இருக்க முடியும் எனவும், கேள்விக்கு பதிலளிக்கும் தைரியம் இன்றி திமுக தலைவர் ஸ்டாலின் வீண் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறார்.

minister jayakumar slams mk stalin

மேலும், மாறன் சகோதரர்கள் ஒரு புறம், கனிமொழி ஒருபுறம், மு.க அழகிரி ஒருபுறமென ஆட்சியை பிடிக்க திமுக தரப்பில் ஒவ்வொருவரும் போட்டிப்போட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஆட்சியை பிடிக்க வேண்டும் என திமுக அகோர பசியில் இருக்கிறது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் சுரண்ட முடியாததால், கையை சுரண்டி வருகிறார்கள். எந்தவொரு சலசலப்புக்கும் அதிமுக அஞ்சாது. மீண்டும் அதிமுக ஆட்சி தான் மலரும் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios