minister jayakumar criticize dinakaran
தினகரன் எப்போது ஜோதிடரானார்? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
Add Asianetnews Tamil as a Preferred Source

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் இணைந்து தினகரனை ஓரங்கட்டிவிட்டனர். இதனால் பழனிசாமி அணியும் தினகரன் அணியும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர். இரட்டை இலை மீட்கும் முயற்சியிலும் இரண்டு அணிகளும் தீவிரமாக உள்ளன.
இந்நிலையில், வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் பழனிசாமி தலைமையிலான ஆட்சி கலையும் என தினகரன் விமர்சித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆட்சி கலையும் என கூறிவரும் தினகரன் எப்போது ஜோதிடரானார் என கேள்வி எழுப்பியதோடு தற்போது தினகரன் ஜோதிடர் வேலைதான் பார்த்துவருவதாகவும் தெரிவித்தார்.
