Asianet News TamilAsianet News Tamil

லெப்டில் இண்டிகேட்டர் போட்டு ரைட்டில் யூ...டர்ன் அடித்த வைகோ..! தலைவா நீங்க வேற லெவல்... தொண்டர்கள் வாய்ஸ்..!

காஷ்மீர் விவகாரத்தில் மோடி சொல்லித்தான் காங்கிரஸ் கட்சியை கழுவி ஊற்றினார் வைகோ என விமர்சிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இந்தியை திணிக்க மூர்க்கத்தனம் காட்டும் மோடியை  என அறிக்கை வெளியிட்டு அசால்டு செய்துள்ளார் வைகோ.

MDMK Vaiko statement
Author
Tamil Nadu, First Published Aug 10, 2019, 3:08 PM IST

காஷ்மீர் விவகாரத்தில் மோடி சொல்லித்தான் காங்கிரஸ் கட்சியை கழுவி ஊற்றினார் வைகோ என விமர்சிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இந்தியை திணிக்க மூர்க்கத்தனம் காட்டும் மோடியை  என அறிக்கை வெளியிட்டு அசால்டு செய்துள்ளார் வைகோ.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காஷ்மீர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் உரையாடிய வைகோ, காஷ்மீரை பிரிப்பதற்கு காரணமாக இருந்தவர் நேரு. எனவே இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிதான் முதல் துரோகி, என தான்பேசிய 10 நிமிடங்களில் 9 நிமிடங்களுக்கு காங்கிரஸ் கட்சியை போட்டு தாக்கி தமிழக அரசியிலில் பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. இதனால் கோபமடைந்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வைகோவை கடுமையான வார்த்தைகளில் விமர்சித்தனர். குறிப்பாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி கூட்டணி தர்மத்தை மதிக்கத்தெரியாதவர் வைகோ.

 MDMK Vaiko statement

அரசியல் நாகரீகம் அற்றவர் வைகோ என்றும் விமர்சித்தார், மற்றொரு காங்கிரஸ் தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்னும் ஒருபடி மேலேபோய், மோடி சொல்லிக்கொடுத்துதான் வைகோ இப்படி பேசுகிறார் என்றும் கடுமை காட்டினார். தமிழர்களை கொன்ற துரோகிதான் காங்கிரஸ் கட்சி என்று வைகோவும் பதிலுக்கு தாக்கினார். இப்படி கூட்டணி கட்சியை ரணகளமாக்கிய வைகோ. தற்போது கட்சி தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார் அதன் விவரம் வருமாறு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும்திருக்குறள் மாநாட்டில் திரளாகப் பங்கேற்பீர்!

வைகோ அழைப்பு

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆகஸ்டு 12 ஆம் நாள், திங்கள் கிழமை சென்னை காமராசர் அரங்கத்தில் நடத்த இருக்கும் திருக்குறள் மாநாடு இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத மாநாடு ஆகும். தமிழ்நாட்டில் திருக்குறள் மாநாட்டினை முதன் முதலில் மிகப்பெரிய அளவில் நடத்தியவர் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள்தான். அதற்கு முன்னால் ஒன்றிரண்டு மாநாடுகள் நடைபெற்றதாக இராவண காவியம் தீட்டிய புலவர் குழந்தை குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் தமிழக மக்கள் உள்ளங்களைக் கவரும் வகையில் பகுத்தறிவுப் பாசறையின் சார்பாக, திருக்குறள் மாநாடுகளைத் தொடர்ந்து நடத்தியவர் தந்தை பெரியார் அவர்கள்தான். செத்துப்போன வடமொழியை புத்துயிர் கொடுத்துத் திணிக்கவும்.

இந்தி ஆதிக்கத்தை நிலைநாட்டவும், மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு மூர்க்கத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சனாதன சக்திகளின் வட ஆரிய கலாச்சார படையெடுப்பைத் தடுத்து நிறுத்தவும், தமிழ் இனத்தின் தன்னேரிலா பண்பாட்டு விழுமியத்தை உயர்த்தவும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை முன்னிறுத்துவதுதான் சரியான போர் முறையாகும். அதனைப் பெரியாரிய உணர்வாளர்கள் பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், அமைப்புகள் ஒரே இலக்கினை முன்வைத்து ஒன்று சேர்ந்து நடத்துகின்ற இம்மாநாடு, 12 ஆம் தேதி காலை 9 மணி முதல் காமராசர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. MDMK Vaiko statement

செந்தமிழ் மொழிக்கு பொன்மகுடம் சூட்டவும், தமிழ் இனத்துக்கு விடியலைக் காணவும், தமிழ் ஈழ விடியலை நிலைநாட்டவும் உணர்வுகொண்ட தமிழர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்துகொள்வது தலையாய கடமை ஆகும் என்பதால், தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்துக்கும் தொண்டு செய்யும் ஊழியன் என்ற முறையில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அன்புடன் இருகரம் கூப்பி வேண்டுகிறேன். MDMK Vaiko statement

இப்படிக்கு மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ காஷ்மீர் மக்களுக்கு கொடுத்தவாக்கை காப்பாற்றாத துரோகிதான் நேரு என இரண்டு தினங்களுக்கு முன்பு  காங்கிரசை வெளுத்துவாங்கிய வைகோ, இந்தி வெறிபிடித்தவர் மோடி என்றும் தொண்டர்களே வாருங்கள்  அவரை முறியடிப்போம் என ஆவோசம் காட்டும் வைகோவின் செயல்,  தலைவா நீங்க வேற லெவல் தலைவா என்று தொண்டர்களை சொல்லவைத்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios