Asianet News TamilAsianet News Tamil

மருது சீமையில் மாண்பைக் குழைக்கும் பெரிய கருப்பன்... மஞ்சு விரட்டுக்கு உறுதி கொடுத்த மருது அழகுராஜ்..!

அரளிப்பாறை மஞ்சுவிரட்டு தன்மையை சீர்குலைக்கும் வகையில், பாறை முன்பாக காம்பவுண்ட் சுவரைத் தனது உறவினர் மூலமாக பெரியகருப்பன் கட்டியதும், அதை மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் சென்று உடைத்து போட்டதும் அனைவரும் அறிந்ததே.

marudhu azhaguraj promised to drive away Manju virattu ..!
Author
Tamil Nadu, First Published Apr 5, 2021, 6:30 PM IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கழக செய்தித் தொடர்பாளரும், நமது அம்மா நாளிதழின் ஆசிரியருமான மருது அழகுராஜ், எதிர்த்து களம் காணும் முன்னாள் அமைச்சர், திமுக  வேட்பாளர் பெரிய கருப்பணை வெற்றி கொள்ளும் நிலையில் உள்ளார். marudhu azhaguraj promised to drive away Manju virattu ..!

மருது அழகுராஜின் அணுகுமுறையும், செயல்களும் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நிர்வாகிகள் குளறுபடி செய்தாலும் பொதுமக்கள் அவர் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் பாரம்பரியமாக நடக்கும் சில விஷயங்களுக்கு இடையூறாக இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, அப்பகுதியில் அரளிப்பாறை மஞ்சுவிரட்டை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அப்பகுதி மக்கள் கருதுகின்றனர். அந்த மஞ்சுவிரட்டு நடைபெறும் பகுதியில் பாறை முன்பாக காம்பவுண்ட் சுவரைத் தனது உறவினர் மூலமாக பெரியகருப்பன் கட்டியதும் அதை மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் சென்று உடைத்து போட்டதும் பெரிய கருப்பனுக்கு எதிராக கோப அலைகளாக அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது. marudhu azhaguraj promised to drive away Manju virattu ..!

இது குறித்து பேசிய மருது அழகுராஜ், ‘’ஐந்து நிலை நாட்டு மக்கள் நடத்தும் அரளிப்பாறை மஞ்சுவிரட்டை தலை கொடுத்தாவது காப்பேன். காளையார் கோவில் கோபுரத்தை இடித்து விடுவேன் என்று வெள்ளையர்கள் மிரட்டியதால் கோயில்களையும், தன் மக்களையும் காப்பாற்ற சரணடைந்த மருது சகோதரர்களிடம், ’உங்கள் ஆசை என்ன’வென்று கேட்டபோது, ’’இந்த பூமியில் உள்ளவரை காளையார்கோயில் கோபுரங்கள் விண் மூட்டியே இருக்க வேண்டும். சிவகங்கை சீமையில் பாரம்பரியமாக நடக்கும் அரளிப்பாறை, சிராவயல், கண்டுபட்டி மஞ்சுவிரட்டுக்கள் தொடர்ந்து நடக்க வேண்டும்’’ என்று பெரிய மருது கேட்டுக்கொண்டது வரலாறு. 

அப்படி வரலாற்று சிறப்புமிக்க ஐந்து நிலை நாட்டு மக்கள் நடத்தும்  அரளிப்பாறை மஞ்சுவிரட்டு தன்மையை சீர்குலைக்கும் வகையில், பாறை முன்பாக காம்பவுண்ட் சுவரைத் தனது உறவினர் மூலமாக பெரியகருப்பன் கட்டியதும், அதை மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் சென்று உடைத்து போட்டதும் அனைவரும் அறிந்ததே. தற்போது தேர்தலுக்காக கட்டுமானத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளவர்கள் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் கட்டக் கூடும் என்று இங்கே சிலர் அச்சம் தெரிவித்தனர்.

மக்கள் இந்த முறை பெரிய கருப்பனுக்கு இப்போது விடை கொடுக்க முடிவு செய்து விட்டனர். அன்று மருது சகோதரர்கள் தலையை கொடுத்து காப்பாற்றிய அரளிப்பாறை மஞ்சுவிரட்டு ஒன்று, அவர்கள் வழியிலேயே நானும் உறுதியாக கூறுகிறேன். நான் வெற்றி பெற்ற பிறகு என் தலையை கொடுத்தாவது அரளிப்பாறை மஞ்சுவிரட்டு மாண்பையும், தொன்மையையும் கட்டி காப்பேன். அரளிப்பாறை பொட்டல் முன்பாக எந்த ஒரு ஆக்கிரமிப்பையும், கட்டுமானத்தையும் அனுமதிக்க மாட்டேன். அதேபோல் சிங்கம்புணரியில் ஒரு நிரந்தர மஞ்சுவிரட்டு தொழுகையும் கட்டிக் கொடுப்பேன்.marudhu azhaguraj promised to drive away Manju virattu ..!

மஞ்சுவிரட்டு இல்லாத கிராமங்களில் அவற்றை அமைத்து கொடுப்பேன். சிங்கம்புணரியில் மக்கள் தெய்வமாக வணங்கும் சேவுகப் பெருமாள் கோயில் மாடுகள் வெளியில் அழையாமல் கோசலை அமைத்து பராமரிக்க நடவடிக்கை எடுப்பேன்’’ என்று உறுதிபடக்கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios