காலையில் கட்சி தாவல்... மாலையில் வேட்பாளர்... தளபதியை தலைதெறிக்க ஓடவிடப்போகும் சரவணன்..!
திமுகவில் சீட் வழங்கப்படாத நிலையில் இன்று காலை பாஜகவில் இணைந்த டாக்டர் சரவணன் மதுரை வடக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை எதிரித்து திமுகவில் கோ.தளபதி, அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயபால் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திமுகவில் சீட் வழங்கப்படாத நிலையில் இன்று காலை பாஜகவில் இணைந்த டாக்டர் சரவணன் மதுரை வடக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை எதிரித்து திமுகவில் கோ.தளபதி, அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயபால் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் இராம. சீனிவாசனுக்கு சீட் ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் தற்போது திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ சரவணன் திமுகவில் சீட் கிடைக்காத நிலையில், இன்று காலை பாஜகவில் இணைந்தார். இணைந்தவுடன் அவருக்கு மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியாகின.
இதனால், ஆத்திரமடைந்த பாஜக பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் புதூரில் உள்ள சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் கதவை பூட்டி போராட்டம் நடத்தினர். பின்னர் ராம. சீனிவாசனுக்கு இந்த தொகுதியை ஒதுக்க வேண்டும் மதிமுகவில் இருந்து ஏற்கனவே பாஜகவிற்கு வந்து மீண்டும் திமுகவில் இணைந்து திருப்பரங்குன்றம் எம்எல்ஏவானர். தற்போது திமுகவில் சீட்டு மறுக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். கட்சியில் நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய சீனிவாசனுக்கு சீட்டு வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்நிலையில், இன்று மதியம் பாஜக போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் வெளியாகியுள்ளது. இதில், திமுகவில் சீட் வழங்கப்படாத நிலையில் இன்று காலை பாஜகவில் இணைந்த டாக்டர் சரவணன் மதுரை வடக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.