Asianet News TamilAsianet News Tamil

நாளை 5,000 இடங்களில் மருத்துவமுகாம்… நாளை மறுநாள் 50,000 இடங்களில் தடுப்பூசி முகாம்… மா.சு அறிவிப்பு!!

#ChennaiFlood | தமிழகம் முழுவதும் நாளை 5000 இடங்களில் மெகா மருத்துவமுகாமும் நாளை மறுநாள் (ஞாயிற்றுகிழமை) 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாமும் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

ma.subaramaninan said about vaccination camp
Author
Chennai, First Published Nov 12, 2021, 6:53 PM IST

தமிழகம் முழுவதும் நாளை 5000 இடங்களில் மெகா மருத்துவமுகாமும் நாளை மறுநாள் (ஞாயிற்றுகிழமை) 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாமும் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னையில் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நின்றுதோடு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் பல பகுதிகளில் மக்கள் முதல் தளத்தில் சிக்கி தவித்து வரும் நிலையில் அவர்களை அதிகாரிகள் படகுகள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ள நீட் இராட்சத மோட்டர்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் அங்கு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றனர். இதற்கிடையே மழை, வெள்ளம் காரணமாக மக்கள் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். பல தரப்பு மக்களுக்கும் சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நாளை 5,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

ma.subaramaninan said about vaccination camp

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆங்காங்கே உள்ள உள்ளாட்சி அமைப்புகளோடு ஒருங்கிணைத்து பெரிய அளவிலான மருத்துவ முகாம்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த வகையில் 75 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைத்து 164 இடங்களில் சென்னையில் தனியார் மருத்துவமனைகளின் சார்பில் மருத்துவமுகாம்கள் மிக சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் 6,115 மருத்துவமுகாம்கள், 3,122 நடமாடும் வாகனங்களின் மூலம்  நடத்தப்பட்டு 2,43,139 பேர் பயன்பெற்றிருகிறார்கள். அந்த வகையில் நாளை தமிழகம் முழுவதும் நாளை 5,000 இடங்களில் மாபெரும் மருத்துவ முகாம்கள் என்கிற வகையில் நடத்த திட்டமிடப்பட்டிருகிறது. சென்னையில் மட்டும் 750 இடங்களில் மருத்துவமுகாம்கள் நடத்தப்பட உள்ளது. நாளை காலை 10 மணிக்கு ரிப்பன் மாளிகை வளாகத்தில் தொடங்கிவைக்கப்பட உள்ளன. மெகா மருத்துவமுகாம் என்கின்ற வகையில் ஒரே நாளில் 5,000 மருத்துவ முகாம்கள் மிக பெரிய அளவில் நடத்தப்பட உள்ளது.

ma.subaramaninan said about vaccination camp

அதற்காக இன்று சென்னை தலைமை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் கூட்டம் நடத்தி 5000 மருத்துவ முகாம்கள் எவ்வாறு நடத்துவது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நாளை மறுநாள் 8வது மெகா தடுப்பூசி முகாம்கள் 50,000 இடங்களில் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தடுப்பூசி போடும் பணிகளில் முதல் தவனை தடுப்பூசி 72 சதவீதமும், இரண்டாம் தவனை தடுப்பூசி 33 சதவீதம் என்கிற அளவிற்கு உயர்ந்து உள்ளது. தற்போது 69 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 70 லட்சம் பேர் இரண்டாவது தடுப்பூசி என்கிற அளவில் இருக்கிறார்கள். இதை அடுத்து 2வது தவனைக்காக காத்திருக்கும் 70 லட்சம் பேரை அழைத்து முகாம்களில் தடுப்பூசி செலுத்துக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி அவசியம் என்பதன் காரணமாக இத்தகைய கடும் மழை பொழியும் சூழலில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது. கோவை மருத்துவ கல்லூரியில் கூடுதலாக 50 மாணவர்களை சேர்ப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios