எந்த அழைப்பு வந்தாலும் அதை உடனே சரி பார்த்து, அதுகுறித்து தீவிரமாக விசாரித்து, மக்களுக்குத் தேவையானப் பொருட்களை எங்களால் முடிந்த அளவு வாங்கிக் கொண்டு போய் சேர்த்து வருகிறோம். நாம் அரசாங்கம் கிடையாது. அரசாங்கத்துக்கு இருக்கிற பணமோ, வசதியோ கிடையாது. ஆனாலும் எங்களை நம்பிக் கேட்ட மக்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்கிறோம்.
அரசாங்கத்துக்கு இருக்கிற பணமோ, வசதியோ கிடையாது. ஆனாலும் எங்களை நம்பிக் கேட்ட மக்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்கிறோம். ஏனென்றால், திமுக என்பது மக்கள் அரசாங்கம். திமுக தொண்டர்களின் உள்ளம் என்பது மாபெரும் கஜானா என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மே 3-ம் தேதிக்கு பிறகு மீண்டும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் திமுக ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி அறிவிக்கப்பட்டுள்ள எண்ணுக்கு அழைப்போருக்கு உணவு பொருட்கள் வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


எந்த அழைப்பு வந்தாலும் அதை உடனே சரி பார்த்து, அதுகுறித்து தீவிரமாக விசாரித்து, மக்களுக்குத் தேவையானப் பொருட்களை எங்களால் முடிந்த அளவு வாங்கிக் கொண்டு போய் சேர்த்து வருகிறோம். நாம் அரசாங்கம் கிடையாது. அரசாங்கத்துக்கு இருக்கிற பணமோ, வசதியோ கிடையாது. ஆனாலும் எங்களை நம்பிக் கேட்ட மக்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்கிறோம். ஏனென்றால், திமுக என்பது மக்கள் அரசாங்கம். திமுக தொண்டர்களின் உள்ளம் என்பது மாபெரும் கஜானா. திமுகவின் உள்கட்டமைப்பு என்பது வேரிலிருந்து வலுவானது. அந்தக் கட்டமைப்பை வைத்து இந்த இக்கட்டான சூழலிலும், கொரோனா காலத்திலும் களத்தில் நிற்கிறோம்.
