Asianet News TamilAsianet News Tamil

சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு அடித்தது லக்..!! எடப்பாடியார் போட்ட அதிரடி உத்தரவு.!!

வயது முதிர்வு காரணமாக தனியாக பயணம் செய்ய இயலாத நிலையில் உடன் பயணிக்கும் உதவியாளர்களுக்கும் பேருந்துகளில் கட்டணமில்லா பயணச் சலுகை வழங்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன

Luck for the freedom fighters and their heirs .. !! Action order issued by Edapadiyar .. !!
Author
Chennai, First Published Dec 5, 2020, 11:43 AM IST

1800 க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் எல்லை காவலர்கள் அவர்தம் வாரிசுதாரர்கள் ஆகியோர்களின் உதவியாளர்கள் பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் முழு விவரம்: 

நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் அவர்தம் வாரிசுதாரர்கள், தமிழ் மொழி, தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாட்டிற்கு பெரும் தொண்டாற்றிய தமிழ் அறிஞர்கள் மற்றும் எல்லை காவலர்கள் அவர்தம் வாரிசுதாரர்கள் 1836 நபர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தமிழகம் முழுவதும் கட்டணம் இல்லாமல் பயணம் செய்திட அனுமதி வழங்கப்பட்டு பேருந்துகளில் பயணம்செய்து வருகிறார்கள்.

Luck for the freedom fighters and their heirs .. !! Action order issued by Edapadiyar .. !!

இந்நிலையில் 60 வயதிற்கு மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள், அவர்தம் வாரிசுதாரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் எல்லை காவலர்கள் அவர்தான் வாரிசுதாரர்கள் ஆகியோர் வயது முதிர்வு காரணமாக தனியாக பயணம் செய்ய இயலாத நிலையில் உடன் பயணிக்கும் உதவியாளர்களுக்கும் பேருந்துகளில் கட்டணமில்லா பயணச் சலுகை வழங்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அந்தக் கோரிக்கைகளை கனிவோடு பரிசளித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இதனை உடனடியாக ஆவண செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்கள். 

Luck for the freedom fighters and their heirs .. !! Action order issued by Edapadiyar .. !!

அதனைத் தொடர்ந்து மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு எம்.ஆர் விஜயபாஸ்கர் அவர்கள் கடந்த 24-3-2020 அன்று போக்குவரத்து துறையின் மானியக் கோரிக்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் எல்லை காவலர்கள், அவர்தம் வாரிசுதாரர்கள் உடன் செல்லும் உதவியாளர்கள் ஒருவருக்கு கட்டணமில்லா பயண அட்டை வழங்கப்படும் என அறிவித்தார்கள்.அதன் அடிப்படையில் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. \

 

Luck for the freedom fighters and their heirs .. !! Action order issued by Edapadiyar .. !!

இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்களை அணுகி மேற்குறிப்பிட்ட 60 வயதிற்கு மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், அவர்தம் வாரிசுதாரர்கள் தமிழறிஞர்கள் மற்றும் எல்லை காவலர்கள் அவர்தான் வாரிசு தாரர்கள் ஆகியோர்கள் அவர்களது உதவியாளர்களின் விவரங்களை சமர்ப்பித்து அனைத்து போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் தமிழகம் முழுவதும் கட்டணம் இல்லாமல் பயணம் செய்திட பயண அட்டைகளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என அதில் கூறப்பட்டுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios