Asianet News TamilAsianet News Tamil

KP.முனுசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் இருக்கும் வரை அதிமுக அழிவை சந்திக்கும்.. முன்னாள் மாவட்ட செயலாளர்

அதிமுகவை மீட்டு சசிகலாவின் ஒன்றை தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக உள்ளதாக ராமநாதபுரம் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் அறிக்கை வெளியிட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

KP Munusamy, Jayakumar CV Shanmugam are there, the AIADMK will face destruction
Author
Ramanathapuram, First Published Jun 2, 2021, 2:45 PM IST

அதிமுகவை மீட்டு சசிகலாவின் ஒன்றை தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக உள்ளதாக ராமநாதபுரம் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் அறிக்கை வெளியிட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அவரது தோழி சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 2017 மார்ச் 14-ம் தேதி சிறை சென்றார். அவரது 4 ஆண்டு சிறை வாசம் முடிந்த நிலையில், கடந்த ஜனவரி 27-ம் தேதி விடுதலையானார். ஆனால், அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் பெங்களூருவிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.

KP Munusamy, Jayakumar CV Shanmugam are there, the AIADMK will face destruction

அதன்பிறகு, பிப்ரவரி 8-ம் தேதி சென்னை திரும்பினார். தொடர்ந்து அவர் அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்தார். ஆனால், தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், மார்ச் 3-ம் தேதி தீவிரஅரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக அறிவித்தார். இதனையடுத்து, நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது. தினகரனின் அமமுகவும் படு தோல்வியை சந்தித்தது.

KP Munusamy, Jayakumar CV Shanmugam are there, the AIADMK will face destruction

இந்நிலையில், சசிகலா அதிமுக தொண்டர்களிடம் செல்போனில் பேசிய ஆடியோ அடுத்தடுத்து வெளியானது.  அதில், நான் சீக்கிரம் வந்துவிடுவேன். ஒன்றும் கவலைப்படாதீர்கள் கண்டிப்பாக கட்சியை சரிபண்ணிவிடலாம். நிச்சயம் வருவேன். கொரோனா முடிந்ததும் நான் வந்துவிடுவேன். எல்லோரும் ஜாக்கிரதையாக இருங்கள். கொரோனா மோசமாக இருக்கிறது. அதிமுகவில் இருக்கும் பிரச்சனைகளை சரிசெய்துவிடலாம்  சசிகலா பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

KP Munusamy, Jayakumar CV Shanmugam are there, the AIADMK will face destruction

இந்நிலையில், மாநில எம்ஜிஆர் துணை கழக செயலாளரான சுப்பிரமணியம் என்பவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம்  போன்றவர்கள் இருக்கும் வரை அதிமுக அழிவை சந்திக்கும் என கடுமையாக சாடியுள்ளார். அதிமுகவை மீட்டு சசிகலாவின் ஒன்றை தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார். சசிகலா பேசியதாக ஆடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி அதிமுகவில் சலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இதுபோன்ற அறிக்கைகள் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios