தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. கூவத்தூரில் கோல்டன் பே ரிசார்ட்டில் சசிகலா ஆதரவு எம்ல் ஏக்கள் தங்கி உள்ளனர். இந்நிலையில் இன்று சசிகலாவுக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதனை தொடர்ந்து, கூவத்தூரில் அசாதாரண சூழல் நிலவுவதால், தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

இன்று மலைக்குள் ஆஜர்

குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சசிகலா உள்ளிட்ட 3 பேர், இன்று மாலைக்குள் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதால், தற்போது கூவத்தூரில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. காரணம் , சசிகலா தனது ஆதரவு எம் எல் ஏக்களுடன் கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கி உள்ளதே .

144 தடை உத்தரவு :

எந்த நேரத்திலும், கூவத்தூரில் தங்கியுள்ள சசிகலாவை கைது செய்ய போலீசார் அங்கு காத்திருக்கின்றனர். மேலும் பொதுமக்கள், தொண்டர்கள் , சசிகலா ஆதரவாளர்கள் அங்கு குவிந்திருப்பதால், எந்த விதமான அசாம்பா விதங்களும் நடைபெறமால் இருக்க , அங்கு 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது