கஜா புயலால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 28 பொருட்கள் அடங்கிய பரிசுப் பெட்டகத்தை  தமிழக அரசு வழங்க உள்ளது.

கடந்த 16 ஆம் தேதி கஜாபுயல், நாகைமாவட்டம், வேதாரண்யம் அருகே அதிகாலைகரையைகடந்தது. இதனால், நாகை, தஞ்சை, திருவாரூர்உள்ளிட்ட, 12 மாவட்டங்கள்கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டைமாவட்டங்கள், கடும்சேதத்தைசந்தித்தன.

இந்த மாவட்டங்களில், 90 சதவீதமின்அமைப்புகள் சேதமடைந்ததால், ஒருவாரத்திற்கும்மேலாக, மின்வினியோகம்முடங்கியுள்ளது. குடிநீர், உணவுஉள்ளிட்டவைகிடைக்காமல், மக்கள்சிரமப்படுகின்றனர்.

அவர்களுக்கு, தொண்டுநிறுவனங்கள், அரசியல்கட்சிகள்உள்ளிட்டவை, நிவாரணபொருட்களைஅனுப்பிவருகின்றன. இந்நிலையில், புயலால், இயல்புவாழ்க்கைபாதிக்கப்பட்டுள்ளகுடும்பங்களுக்கு,அரிசி, சர்க்கரைஉள்ளிட்ட, 28 அத்தியாவசியபொருட்கள்அடங்கிய, பரிசுபெட்டகத்தை, தமிழகஅரசுவழங்கஉள்ளது.


தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் புயலால்பாதிக்கப்பட்ட, 2.50 லட்சம்பேர், அரசுமுகாம்களில்தங்கவைக்கப்பட்டனர். அதில், ஒவ்வொருகுடும்பத்திற்கும், அரசுசார்பில், தலா, 10 கிலோஅரிசி, வேட்டி, சேலை, 5லிட்டர்மண்ணெண்ணெய்வழங்க, தமிழகஅரசுஉத்தரவிட்டது.

தென்னை, கரும்பு, வாழைஎன, விவசாயத்தைநம்பிஇருந்தபலர், புயலால், வாழ்வாதாரத்தைஇழந்துள்ளனர். அதன்படி, தஞ்சை, நாகை, திருவாரூர்,புதுக்கோட்டையில், கணக்குஎடுக்கப்பட்டதில், 4.68 லட்சம்ரேஷன்கார்டுதாரர்கள், கடுமையாகபாதிக்கப்பட்டுஇருப்பதுதெரியவந்துள்ளது. இதனால், ஒவ்வொருகார்டுதாரருக்கும், தலா, 10 கிலோஅரிசி, 2கிலோசர்க்கரை, 2 கிலோரவை, உப்பு, குளியல்மற்றும்சலவைசோப்புகள், இரண்டுதுண்டு, நைட்டி, வேட்டி, சேலை, தேயிலைதுாள், டார்ச்லைட்என, 28 அத்தியாவசியபொருட்கள்அடங்கிய, பரிசுபெட்டகம்வழங்கப்படஉள்ளது.


இந்தபொருட்களை, நுகர்பொருள்வாணிபகழகமும், கூட்டுறவுசங்கங்களும்கொள்முதல்செய்து, திருச்சி, விழுப்புரத்தில்உள்ள, சேமிப்புகிடங்குகளில், 'பேக்கிங்' செய்துவருகின்றன. புயல்பாதிப்புகளைபார்வையிட, நாகைவரும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை , அந்தபொருட்களை, பாதிக்கப்பட்டசிலருக்குவழங்கஉள்ளார்.

அதைதொடர்ந்து, அவை, ரேஷன்கடைகள்வாயிலாக, மற்றவர்களுக்குவழங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.