முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் குணமாக வேண்டும் என லட்சக்கணக்கானோர் இன்று தமிழகம் முழுவதும், பல்வேறு கோயில்களில் யாகம், பரிகாரம், பூஜைகள் நடத்தி பிரார்த்தனைகள் செய்கின்றனர்.
Add Asianetnews Tamil as a Preferred Source

கடந்த 1984ம் ஆண்டு, முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். உடல் நலக்குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவருக்கு பூரண குணமாக வேண்டும் என, ராஜ்யசபா எம்பியாக இருந்த ஜெயலலிதா, காஞ்சிபுரம் மாவட்டம் மாடம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் யாகம் நடத்தினார்.
