Asianet News TamilAsianet News Tamil

திமுக நடத்தும் பேரணிக்கு நடிகர்களை எல்லாம் ஏன் கூப்பிடுறாங்க தெரியுமா? சிரிப்பாய் சிரித்த ஜெயகுமார் !!

நடிகர்களை பார்ப்பதற்காக கூட்டம் வரும் என்பதால், பேரணியில் பங்கேற்க நடிகர் சங்கத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

jayakumar  talk about DMK ralley
Author
Chennai, First Published Dec 21, 2019, 10:24 PM IST

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக . தலைமையில் கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் பேரணி சென்னையில் திங்கட் கிழமை  நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு திரையுலகினர், வணிகர்கள், மாணவ அமைப்பினர் உள்பட 98 அமைப்புகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு கடிதம் அனுப்பி உள்ளார். குறிப்பாக நடிகர் – நடிகைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

jayakumar  talk about DMK ralley

பேரணியில் ஒரு லட்சம் பேரை திரட்டுவதற்கு தி.மு.க. திட்டமிட்டுள்ளது. எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகே தொடங்கும் பேரணி புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் மைதானம் அருகே நிறைவடையும் என்று சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

jayakumar  talk about DMK ralley

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற  விழா  ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் ஜெயகுமார், அதிமுக கட்சி கொடியிலேயே அண்ணாவை வைத்துள்ளதாகவும், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தாங்கள்  ஆட்சி நடத்துவதாகவும்  தெரிவித்தார்.

jayakumar  talk about DMK ralley

தொடர்ந்து பேசிய அவர் நடிகர்களை பார்ப்பதற்காக கூட்டம் வரும் என்பதால், பேரணியில் பங்கேற்க நடிகர் சங்கத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது என கூறி பெரிதாக சிரித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios