Asianet News TamilAsianet News Tamil

பெரியார் பெயரை சொல்லும் தகுதி வேண்டுமென்றால் இதைச் செய்யுங்கள்... அதிமுக அரசுக்கு ஜவாஹிருல்லா அதிரடி கோரிக்கை!

"பெரியாரின் அரும் பெரும் தொண்டினால் விளைந்த சமூக நீதி கொள்கைக்கு விரோதமானவர்களின் இந்த இழிச் செயலை தீர விசாரித்து அவர்களை முழுமையாக அடையாளம் கண்டு கடுமையாகத் தண்டிப்பதுதான் அதிமுக அரசுக்குப் பெரியாரின் பெயரைச் சொல்லுவதற்குத் தகுதியான அரசு என்ற நிலையை ஏற்படுத்தும்” என்று அறிக்கையில் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Jawahirullah condom on Periyar statue irrespect issue
Author
Chennai, First Published Jul 17, 2020, 8:47 PM IST

சமீப காலமாகத் தமிழகத்தில்  தந்தை பெரியாரின் உருவச் சிலைகள் மீது தாக்குதல் நடத்துவது தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.Jawahirullah condom on Periyar statue irrespect issue
இது தொடர்பாக ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை சுந்தராபுரம் பகுதியில் தந்தை பெரியார் சிலை மீது திருட்டுத்தனமாகக் காவி சாயத்தைப் பூசி சில சமூக விரோத சக்திகள் இழிவு செய்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி  வன்மையாகக் கண்டிக்கிறது. இன்று தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேறியிருக்கிறார்கள் என்றால் அது தந்தை பெரியாரின் சமூக நீதிக்கான அறப்போராட்டமே வித்தாக விருட்சமாக அமைந்திருந்தது. தமிழகத்தின் முன்னேற்றம் தந்தை பெரியாரின் கடும் உழைப்பின் விளைவாக உருவாகிய திராவிட கட்சிகளின் ஆட்சியால் உருவாக்கப்பட்டது. சமூக நீதியின் கொள்கையால் சாமானிய மக்கள் முன்னேற்றம் அடைந்ததை விரும்பாதவர்கள்தான் பெரியாரின் எதிரிகளாக இருக்கிறார்கள் என்பது எதார்த்தமான உண்மையாகும்.

Jawahirullah condom on Periyar statue irrespect issue
சமீப காலமாகத் தமிழகத்தில்  தந்தை பெரியாரின் உருவச் சிலைகள் மீது தாக்குதல் நடத்துவது தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது.  பெரியார் சிலைகளை இழிவுபடுத்துபவர்களை மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்றெல்லாம் கூறி கடந்த காலங்களில் அவர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப விட்டதின் விளைவாகவே தமிழகத்தில் தொடர்ச்சியாகப் பெரியார் சிலையை இழிவுபடுத்தும் செயல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொடர் வஞ்சக செயலை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இச்செயலில் ஈடுபட்டுள்ள கயவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாகத் தண்டிக்க வேண்டுமென கேட்டு கொள்கிறேன்.

Jawahirullah condom on Periyar statue irrespect issue
பெரியாரின் அரும் பெரும் தொண்டினால் விளைந்த சமூக நீதி கொள்கைக்கு விரோதமானவர்களின் இந்த இழிச் செயலை தீர விசாரித்து அவர்களை முழுமையாக அடையாளம் கண்டு கடுமையாகத் தண்டிப்பதுதான் அதிமுக அரசுக்குப் பெரியாரின் பெயரைச் சொல்லுவதற்குத் தகுதியான அரசு என்ற நிலையை ஏற்படுத்தும்” என்று அறிக்கையில் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios