Asianet News TamilAsianet News Tamil

இளையராஜாவே வெளியே போ...!! குடைச்சல் கொடுக்கும் பிரசாத் ஸ்டுடியோ...!!

இளையராஜா அந்த ஸ்டுடியோவில் வைத்து ஒலிப்பதிவு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பிரசாத் ஸ்டூடியோ இயக்குனரும், எல்.வி. பிரசாத்தின் பேரனுமாகிய சாய் பிரசாத் ஸ்டுடியோ 1இல் சில மேஜைகளை போட்டு சுமார் 20 கணினிகளை வைத்து இசையமைக்க விடாமல் இடையூறு செய்வதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

isai gani ilayaraja complaint against prasath studio
Author
Chennai, First Published Oct 3, 2019, 6:05 PM IST

சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பிரசாத் ஸ்டுடியோ இயக்குனர் உட்பட மூன்று பேர் மீது இசையமைப்பாளர் இளையராஜாவின் உதவியாளர் புகார் அளித்துள்ளார்.

isai gani ilayaraja complaint against prasath studio

சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில், ஸ்டூடியோ 1 ஐ, அதன் நிறுவனர் எல்.வி.பிரசாத் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாக இளையராஜா அந்த ஸ்டுடியோவில் வைத்து ஒலிப்பதிவு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பிரசாத் ஸ்டூடியோ இயக்குனரும், எல்.வி. பிரசாத்தின் பேரனுமாகிய சாய் பிரசாத் ஸ்டுடியோ 1இல் சில மேஜைகளை போட்டு சுமார் 20 கணினிகளை வைத்து இசையமைக்க விடாமல் இடையூறு செய்வதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

isai gani ilayaraja complaint against prasath studio

இளையராஜா குழுவில் உள்ள இசைக்கலைஞர்கள் தங்களது கருவிகளை அங்கேயே வைத்து பூட்டுவது வழக்கமாக இருந்த நிலையில் இளையராஜா குழுவினரின் இசைக்கருவிகள் சேதமாக வாய்புள்ளதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஸ்டுடியோவை ஆக்கிரமித்தாக பிரசாத் ஸ்டுடியோ இயக்குனர் சாய் பிரசாத், மற்றும் அதன் ஊழியர்கள் ஊழியர்கள் பாஸ்கர் மற்றும் சிவராமன் ஆகியோர் மீது இளையராஜாவின் உதவியாளர் கஃபார் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தபால் மூலம் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட விருகம்பாக்கம் போலீசார் வழக்கை விசாரித்த வருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios