செப்டம்பர் 5 முதல் 8 வரை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 6, 8, 9 குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், 

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை,காரைக்காலில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

அடுத்த 24 மணி நேரத்தில், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர், நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்சும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாககூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் உசிலம்பட்டி (மதுரை) 13 சென்டிமீட்டர் மழையும், தேவலா (நீலகிரி) குப்பணம்பட்டி (மதுரை) தலா 9 சென்டிமீட்டர் மழையும், சிவகங்கை ஒகேனக்கல் (தர்மபுரி) இடையப்பட்டி (மதுரை) கிருஷ்ணராயபுரம் (கரூர்) தல 8 சென்டி மீட்டர் மழையும், பெரியகுளம் (தேனி) சின்னக்கல்லார்(கோவை) கொடநாடு (நீலகிரி) தலா ஏழு சென்டிமீட்டர் மழையும், வால்பாறை (கோவை) வால்பாறை வட்டார அலுவலகம் (கோவை) மாயனூர் (கருர்) தால 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 9 வரை தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

செப்டம்பர் 5 முதல் 8 வரை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 6, 8, 9 குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 5, 6 ஆகிய தேதிகளில் மாலத்தீவு பகுதிகளில், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 6 ,7 தேதிகளில் தெற்கு கேரள கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 6-9-2020 இரவு 11 30 மணி வரை கடல் உயர் அலை 3.0 முதல் 3.3 மீட்டர் வரை எழும்ப கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.