விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி தராவிட்டால் இந்த ஆட்சி நிலைக்காது என பகிரங்க மிரட்டல் விடுத்தார் அண்ணாமலை.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சகட்டு மேனிக்கு அனைவரையும் விமர்சித்துப் பேசி வருகிறார். அவர் தமிழகத்தில் மிரட்டல் அரசியல் செய்து வருவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன. விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி தராவிட்டால் இந்த ஆட்சி நிலைக்காது என பகிரங்க மிரட்டல் விடுத்தார் அண்ணாமலை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அரசியல் கருத்து விமர்சனம் செய்யுங்கள். ஆனால் காழ்ப்புணர்ச்சியோடு இழிவுபடுத்தி பேசினால், சும்மா இருக்க மாட்டோம். உங்களது அடிமட்டம் வரை செல்வோம். உங்களது பிஸினசில் கை வைப்போம் என்றெல்லாம் பேசினார் அண்ணாமலை. இதனால், தமிழகத்தில் அவருக்கு எதிர்ப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதை உணர்ந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சகம், அண்ணாமலைக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளது. விரைவில் மத்திய சி.ஆர்.பி.எஃப்., பின் கருப்பு பூனை பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.